உமாமகேஸ்வரி ச க - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உமாமகேஸ்வரி ச க
இடம்:  THIRUVANNAMALAI
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Oct-2013
பார்த்தவர்கள்:  5129
புள்ளி:  963

என்னைப் பற்றி...

கவிதை படைக்க, படிக்க பிடிக்கும் !!..

என் படைப்புகள்
உமாமகேஸ்வரி ச க செய்திகள்
உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2025 2:39 pm

உன் வண்ண
சிறகுகளை அசைத்து
கைதேர்ந்த விமானியாக
உன் எண்ணப்படி
நிழலின்
கொடையாக மாற்றி
கண்டம் விட்டு கண்டம்
நாடு விட்டு நாடு
அலைகடலின் மேலே
மேகங்களின் ஊடே
உறக்கத்தை தொலைத்து
உணவை தொலைத்து
ஓய்வின்றி நாளும்
புலம்பெயரும் அழகிய
பறவையே
உன் உழைப்பின் இரகசியம்
என்னவென்று சற்று
என்னிடம் உரைப்பாயா....

மேலும்

உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2025 2:52 pm

வயது
ஒரு விசயமல்ல..

மனதால்
என்றும்
இளமையாகவே இருக்க முயற்சிப்போம்..!

எப்போதும்
மதிப்புமிக்கவராய்
உணர்வோம்!

நமக்காக
இங்கே
நாம் மட்டுமே!

நமக்கானதை
நாமே
செய்து கொள்வோம்..

நமக்கான
ஆதரவு
நம்மிடமிருந்தே
தொடங்கட்டும்..

நமக்கான
முதல் கைதட்டல்
நம்மிடமிருந்தே
இருக்கட்டும்...!

மனித
உணர்வான அன்பு
நம்மிடமிருந்தே
பிறக்கட்டும்....

பிறருக்கு கொடுத்து
உதவும் பண்பு
நம்மிடமிருந்தே
உருவாகட்டும்.....

என்றும் நமக்கான
பாதையில் முட்களை
தகர்த்தெறிந்து
பயணிப்போம்......

மேலும்

உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2025 2:38 pm

நாம்
மனங்களோடு உறவாடாமல்
கைபேசியோடு உறவாடுகிறோம்

வாசிப்பையும் நேசிப்பையும்
மறந்துவிட்டோம்
கண்ணுக்கு தெரியாத
உறவுகளோடு
கைகோர்த்து விட்டோம்

எந்த பயணங்களும்
சிறப்பாக இருப்பதில்லை
செவியில் பொறிகளை
இணைத்து
கண்ணை மூடியபடி
பக்கத்து இருக்கைகளின்
பக்கம்கூட திரும்புவதில்லை

குறுநகைகூட மறந்து
வேற்று கிரகவாசியாக
வேரற்றமரம் போல

நாமே இப்படி என்றால்
நம் சந்ததியை
எண்ணிப்பாருங்கள்

அவர்களின் எதிர்காலம்
விடை தெரியாத
வினாக்களாக இருக்கிறது

தலைமுறைகள்
தழைத்தோங்க
புதுமைகளையும்
பழமைகளையும்
சொல்லித்தாருங்கள்

பீசா, பர்கரை மறந்து
நம் தானிய குதிர்களை
சேமிப்பின் அருமையை
சேதமற சொல்லுங்கள்

மேலும்

உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2025 7:46 pm

புத்தகமே
அனுபவ படிக்கட்டு
நம்மை ஏற்றிவிடும்
ஏணி

எழுத்தாளன்
தன் கருத்தை பிசைந்து
புத்தகங்களை
பிரசவிக்கிறான்

எழுத்துகளுக்கு
வண்ணம் கொடுத்து
எண்ணமேற்றி
வாழ்க்கைக்கு
உகந்ததாக்குகிறான்

உண்ணாமல்
உறங்காமல்
தூக்கத்தை தொலைத்து
தூரிகை கொண்டு
புத்தகங்களை
மணிமகுடமாக
முடிசூட்டுகிறான்

ஒரு புத்தகத்தை
வாசித்து நேசித்து
பாருங்கள்
அதன் அர்த்தமும்
அற்புதமும் தெரியும்

கருத்தை
சிந்தையில் ஏற்றி
உங்களை மனதோடு
உறவாட வைப்பது
புத்தகமே

வாழ்க்கை எனும்
கடலைகடக்க
கருத்தின் தோணியாக
இருப்பது
புத்தகமே

மேலும்

உண்மை...தங்கள் வருகைக்கும் மேலதிக வர்ணனைக்கும் மிக்க மகிழ்ச்சி🙏 09-Feb-2025 2:20 pm
புத்தக வரையறைகள் அருமை புத்தகத்தை செல்ஃபில் அடுக்கி வைத்தால் அழகு புத்தகத்தை அழகிய பெண் படிக்க எடுத்தால் அறிவு அந்தக் காட்சி ஓர் ஓவியனுக்கு ஒப்பற்ற பரிசு 07-Feb-2025 6:22 pm
உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2025 7:46 pm

புத்தகமே
அனுபவ படிக்கட்டு
நம்மை ஏற்றிவிடும்
ஏணி

எழுத்தாளன்
தன் கருத்தை பிசைந்து
புத்தகங்களை
பிரசவிக்கிறான்

எழுத்துகளுக்கு
வண்ணம் கொடுத்து
எண்ணமேற்றி
வாழ்க்கைக்கு
உகந்ததாக்குகிறான்

உண்ணாமல்
உறங்காமல்
தூக்கத்தை தொலைத்து
தூரிகை கொண்டு
புத்தகங்களை
மணிமகுடமாக
முடிசூட்டுகிறான்

ஒரு புத்தகத்தை
வாசித்து நேசித்து
பாருங்கள்
அதன் அர்த்தமும்
அற்புதமும் தெரியும்

கருத்தை
சிந்தையில் ஏற்றி
உங்களை மனதோடு
உறவாட வைப்பது
புத்தகமே

வாழ்க்கை எனும்
கடலைகடக்க
கருத்தின் தோணியாக
இருப்பது
புத்தகமே

மேலும்

உண்மை...தங்கள் வருகைக்கும் மேலதிக வர்ணனைக்கும் மிக்க மகிழ்ச்சி🙏 09-Feb-2025 2:20 pm
புத்தக வரையறைகள் அருமை புத்தகத்தை செல்ஃபில் அடுக்கி வைத்தால் அழகு புத்தகத்தை அழகிய பெண் படிக்க எடுத்தால் அறிவு அந்தக் காட்சி ஓர் ஓவியனுக்கு ஒப்பற்ற பரிசு 07-Feb-2025 6:22 pm
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2025 12:18 pm

மனிதர்கள் ஏன்
மனிதம் அற்று
முன்னுக்கு பின்
முரணாக இருக்கிறார்கள்
மனபேதத்தின் காரணமா
பணபேதத்தின் காரணமா
மெல்லவும் முடியாது
முழுங்கவும் முடியாது
ஏனிந்த ஏற்றத்தாழ்வு
எள்ளி நகையாடுவதை தவிர
வேறு மொழி இல்லை
வெற்று காகிதங்களே

மேலும்

உண்மை இங்கு பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி🙏 02-Feb-2025 7:44 pm
முரணாக இருக்கிறார்கள் மனபேதத்தின் காரணமா பணபேதத்தின் காரணமா ----ஆம் 02-Feb-2025 11:36 am
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2018 11:12 pm

அவன் அப்படி ஒன்றும்
அழகன் இல்லை
தூர தேசத்து
மன்னனும் இல்லை
அவன் எப்போதும்
இங்கேதான் இருப்பான்
எத்தனையோ ஆண்டுகளாய்
கடந்து செல்கிறேன் அவனை
கண்கள் சந்திக்கும் போது
அரைகுறை புன்னகை
தயங்கியே உதிர்க்கும்
வாய்மொழி பரிமாற்றம்
கிஞ்சித்தும் இல்லை
வர்ணனைக்கு அப்பாற்பட்டவன்
என கண்களை விட்டு
இல்லாமல் போனான்
அவன் இல்லாதுபோன
நாள்முதலாய் எல்லோரையும்
கேட்கிறேன் அவன்யாரென்று

மேலும்

உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2022 8:01 pm

அது ஒரு அழகிய நந்தவனம் எண்ணற்ற மலர்கள் நறுமணம் பரப்பிக் கொண்டு பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கும்
மகரந்ததூள்கள் ஆங்காங்கே மஞ்சள் பாய்களாக மரத்தடிகளில் பரப்பிஇருக்கும் .இதையெல்லாம் இரசிக்க இரண்டு கண்கள் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகிய தோட்டமது.

இந்த நந்தவனத்தை உருவாக்கியவள் யாழினி ஒவ்வொரு மரத்தையும்,மலர் கொண்ட செடியையும் தொட்டு தொட்டு பேசி அதனுடன் உறவாடுவாள் .
அந்த நந்த வனத்தில் அழகிய பட்டாம் பூச்சிகள் எண்ணற்ற வண்ணங்களில் அங்கும் இங்கும் தாவி மலர்களில் அமர்ந்தும் பறந்து கொண்டிருக்கும்.
அதனை மிகவும் இரசித்துக் கொண்டு இருப்பாள் யாழினி.

வழக்கம் போல் இன்றும் தோட்டத்திற்கு வந்தவள்

மேலும்

உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2022 6:15 pm

ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....

வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...

பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....

வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...

அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...

துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...

தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...

அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...

அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...

கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...

அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...

நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 30-Oct-2022 7:24 pm
துக்கத்தை சுமந்து தூக்கத்தை தொலைத்த அதிகாலையாய் இருக்கலாம்... ----அருமை அனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கவிதை பாராட்டுக்கள் 30-Oct-2022 6:57 pm
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2022 6:15 pm

ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....

வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...

பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....

வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...

அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...

துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...

தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...

அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...

அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...

கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...

அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...

நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 30-Oct-2022 7:24 pm
துக்கத்தை சுமந்து தூக்கத்தை தொலைத்த அதிகாலையாய் இருக்கலாம்... ----அருமை அனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கவிதை பாராட்டுக்கள் 30-Oct-2022 6:57 pm
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2021 2:02 pm

தேங்கிய மழைநீர்
கடலானது குழந்தைகளுக்கு
கப்பல் விட்டு விளையாட

மேலும்

உண்மைதான்! இக் கால சிறுவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை இழந்து விட்டார்கள்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 04-Aug-2021 7:04 pm
வணக்கம் உமா பாரதி அவர்களே ... உங்கள் கவிதையின் வரிகள் என்னுடைய இளமை பருவத்தின் நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டது.. இந்த கால சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் குறைவே ...!! வாழ்த்துக்கள் ..வாழ்க நலமுடன் ..!! 04-Aug-2021 6:49 pm
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2021 2:48 pm

மரக்
கிளைகளில்
மோதும்
மழைத் துளிகள்
சடசடவென
பேரிரைச்சலோடு
புரியாத மொழியாக
நனையாமல்
ஒதுங்கு
என்பதோ!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (179)

இவர் பின்தொடர்பவர்கள் (179)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (179)

Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
esaran

esaran

சென்னை
user photo

காசிராஜன்

கிருட்டிணகிரி

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே