கவிதைகள் கொலையாகின்றன!

கவிதைகள் கொலையாகின்றன!
இங்கே
இன்பத்தை மட்டுமே
அவை பாடும் போது!

துன்பத்தை வாழ்த்தி இங்கு
வரிகள் வழங்குகிறேன்!

துன்பமது மணற்கேணி-தூர்வார
நம்பிக்கை ஊற்றது
நீர் சுரக்கும்!

தினம் உண்டு - அவன்
உடுத்த கோடிகளெதுவும் தேவையில்லை
துன்பம்
தொலைத்து வாழும் வாழ்க்கை
பெருநெல்லி போலேன்றும் இனிப்பதில்லை!


வருவதை எற்றே - வானம்
நோக்கு!
நெடுந்தொடர் வாழ்வில் குறுந்தொகை
செல்வம், கருத்தினில் எற்றே
கவலையைச் சாடு!


நெஞ்சத் துணிவது
நிலைய வாழ்வில்
துன்பம் உதிர்த்த கனிதானே!

எழுதியவர் : சரவணா (21-Nov-12, 12:46 pm)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 144

மேலே