மின்வெட்டு
இருட்டில் வாழ பழகிவிட்டோம்
இனி வெளிச்சம் தேவையில்லை
வெளிச்சம் தேடி அலைந்து
விளக்கில் மடியும்
விட்டில் பூச்சியல்ல
நாங்கள்
இனி மின்வெட்டு தளர்ந்து
மிகையாய் வந்தாலும்
வீடுகளுக்கு
அதிகம் வேண்டாம்
ஆலைகளுக்கு கொடுங்கள்
ஆயிரம் தொழிலாளர்கள்
வாழ்வில் வெளிச்சம் வரும்

