ஒவ்வொரு நொடியும்
அலையலையாய் சுற்றி வலம்வந்து
தித்திப்பாய் உணவு படைக்கிறாய்.
அடிக்கடி என்னைத் தேடித்தேடி
வாசல்கதவினை உளைக்கிறாய்.
காற்றாகிப்போனாலும் கதவினை
கரிசனத்தொடே அடைக்கிறாய்,
எப்படியும் ஒருநாள் உன்காற்று வரும்
என்ற முழுமையான நம்பிக்கையுடன்.
அவனுக்கு இது பிடிக்கும் என்றே
அந்த சமையல், காலமாய் அமையும்.
ஆகாசமாய் களைந்து அமர்ந்திருப்பினும்
ஆயாசமாய் படுக்கையில் சரிந்திருப்பினும்,
சந்திப்பில் நீ சிந்திய நினைவலைகளின்
நிகழ்வுகள் சொரூட்டுகிறது நிழலாய்.
மாடியில் காட்டிய கலவிக் கண்ஜாடை,
கண்டுகொண்டு புரட்டிய என் அறியாமை.
கடலைக்கறியினை எனக்காய் அமைத்து
மனமடி சமைந்து நின்ற நொடிப்பொழுது,
மலர்ந்த மனம் உடையவில்லை
உடலும் தன் நிலை மாறிடவில்லை என,
முட்டைகளை முன்னிலைப்படுத்தி,
உணர்த்திய உன்னின் அன்புக்காதல்,
பண்புடன் படைகொண்ட துணை கவ்வி
நடைபயிலும் விந்தையான வித்தைகள்.
நடத்திட முடியாத இன்ப உளைச்சல்,
நடத்திநிற்கும் கனவுகள் விதைத்து.
இந்த நொடி நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்ற கனவிலேயே நகருகிறது வாழ்க்கை.