யோசித்துப் பார் !
யோசித்துப் பார் !
யோசித்துப் பார்
பசி என்னும் சொல் உன்
உன் ஏட்டில் கூட இருக்காது
கண்கள் இரண்டும் உள்ளே போகிடும்
நித்திரை என்பதை
நீ எழுதியும் பார்த்திடாய்
உன் நாவை தேடி
உமிழ்நீர் கூட வராது -ஆனால்
அடிக்கடி கை ஒன்று
தலையை தேடியே சொறிந்திடும்
பைத்தியம் என்றுன்னை
வைத்தியம் செய்யவும் நேரிடும்
உன்மனவானில் கொடிகட்டி பறந்திடுவாய்
எவருமே கண்டிடார்
என்னை எனக்கே பிடிக்காது
உலக்குக்கெப்படி பிடிக்கும் ?என்று எண்ணுவாய்
உண்மைதான் என்று அதிலும்
சமாளித்துகொள்ளுவாய்
உன் சுட்டு விரல்
உன்னை பார்த்து கேள்விகள் பல கேட்டிடும்
வெள்ளைத் தாளும் பேனாவும்
உன்னைக்கேக்காமலே கிறிக்கிடும்
எண்ணமது எழுந்து வர நீ
ஏதேதோ எழுதிடுவாய்
எழுதியது கவிதியாகும்
நீ கவிஞனாவாய் ஆனால்
எவரும் வாசகர் ஆகார் !
---------------------------------------
நேசித்துப் பார் புரியுமிது