உண்மையின் தரிசனம்
முன்னொரு காலத்தில்
தெரியாத விஷயங்கள் கூட ...
தெரிந்துவிட்டபோது
பாவம் எனப்பட்டது...
பாவம் எனப்பட்டதே
பின்னர்
அநியாயம் என்றானது...
அதுவும் கூட-
நியாயமான
அநியாய மெனப்பட்டது...
இன்று-
அநியாயமே "நியாயமாக"
அவதாரம் எடுத்து விட்டது...