நீ தானே என் பொன் வசந்தம் - விமர்சனம்

கெளதம் மேனனிடமிருந்து மீண்டும் ஒரு காதல் கதை.
வருண்(ஜீவா) - நித்யா (சமந்தா), இவர்கள் தங்களது பள்ளி வயதில், கல்லூரி வயதில், வேலை பார்க்கும் வயதில்,
வருணின் திருமணத்திற்கு முதல் நாளில் - எப்படி பிரிகிறார்கள், எப்படி சேர்கிறார்கள் என்பதை சொல்வதாக இருந்தாலும்,
அவர்களுக்கு அவர்கள் தான் பொன் வசந்தம் என்பதை சொல்வதே - "நீ தானே என் பொன் வசந்தம்"..!
எல்லா கெளதம் மேனனுடைய படங்களிலும் வரும் ஆங்கில வசனங்கள், மேல் மட்ட - நடுத்தர குடும்ப கதாநாயகன்,
மகனை புரிந்து நடக்கும் தந்தை, சி(ப)ல முத்த காட்சிகள் ஆகியவற்றிற்கு - இந்த படமும் விதி விளக்கு அல்ல.
சற்று வசீகரிக்கும் முகத்துடன் ஜீவா, தனது கதாப் பாத்திரத்தை செம்மனே வெளிக் கொண்டு வந்துள்ளார்.
குரலில் வசீகரம் இல்லை என்றாலும் தனது முக பாவனைகளால் ஈர்க்கிறார் - சமந்தா.
இந்த வயதிலும் இளைய ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கிறார் : இளைய ராஜா
மன்னிக்கவும் "இசை ராஜா".
வெளி நாடுகளில் சுற்றித் திரிபவர், தென் தமிழகத்தின் ஒரு மூலையில் கூரைப் பள்ளி நடத்தும் காட்சிகளும் ,
வெளி நாடுகளுக்கு செல்ல விரும்பும் பெற்றோரை, ஜீவா வேலைக்கு சென்று வெளி நாடு அனுப்புவதை
ஒரு சில வசனங்களில் காட்டி இருக்கும் இடத்திலும் இயக்குனர் நம் பாராட்டை பெறுகிறார்..
இரண்டாவது பாதியில் கொஞ்சத்தை வெட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
கதை மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம்.
காதலிப்பவர்களுக்கும் காதல் சார்ந்தவர்களுக்கும் பிடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் மற்றவர்களுக்கு பிடிக்குமா என்பது ஐயமே!!!!!!!...
விகடனின் பார்வையில் 42 மதிப்பெண்கள் கிடைக்கலாம் ..!