கண்ணீரே! தண்ணீராய்!

அன்று!
விழிகளில் பேசி
விதைத்தாய் காதலை!
இன்று!
அதே விழிகளில்
கோபம் காட்டி வெறுக்கிறாய்!
நீ
விதைத்த காதல் விதைக்கு
என்
விழிகளில் சிந்தும் கண்ணீரை!
தண்ணீராய் ஊற்றுகிறேன்
துளிர்க்காதா என்ற ஏக்கத்தோடு!

எழுதியவர் : குணசேகரன்.K (26-Dec-12, 9:04 am)
பார்வை : 211

மேலே