இதய சிம்மாசனம்

வசீகரமானது
உன் புன்னகை
இதழ்களில்
அலங்கரிக்கின்றன
ஆபரணங்கள் !

என்னோடு
தொடர்ந்து வருகிறது
உன் நிழல்
மட்டுமே !

உன் உணர்வுகளை
நானறியேன் .
ஆனால்..
என் இதயம் முழுதும்
அலங்கரிக்கின்றன
மலர்ப் பஞ்சணையாக !

உன் இதயம்
மலர்ந்ததும்
சிம்மாசனமாகிறது
என் மனமெல்லாம் !

என் விக்ரகத்தின்
மலர்ப் பாதங்களில்
முத்தமிடுகிறேன்
கைகளில் ஏந்தி ..!

உன் பெயர்
என் மனமெல்லாம்
சொல்கிறது ஒவ்வொரு
துடிப்பிலும் !

அந்தப் பெயர்
என் நெஞ்சில்
இசைக்கிறது
வீணையின் இனிய
நாதம் போல் ..!

காதலியைப் பிரிந்த
அன்னத்தைப் போல
துடிக்கிறது
என் இதயம் !

ஒரு பூங்கொடியை
என் மீது படர விட்டது போல
உன் உருவம்
என் நினைவுகளில் !

என் தேவலோகத்து
இதய தேவதை
என்று
காண்பேன்
சொல் சிம்மாசனமே !

எழுதியவர் : செயா ரெத்தினம் (27-Dec-12, 4:07 am)
Tanglish : ithaya simmasanam
பார்வை : 201

மேலே