தை மகளே வருக- பொங்கல் கவிதை போட்டி

ஏழை விவசாயின் மகளே...
வருக வருக
என்று வரவேற்கிறோம் .....
வந்தமைக்கு நன்றியின்பால் ..
பால் பொங்கலை
சூரியகடவுளுக்கு
படைக்கும் தமிழர்கள் தான் நாங்கள் ..
அனைவரின் வீட்டிலும்
பொங்கலுடன் ஆனந்தத்தையும் பொங்க வைக்க ..
வழி விடுமாறு ..
தை மகளே ..
உன்னை கை கூப்புகிறோம்...
வாயில்லா உயிரினங்களுக்கு
உன் பிறந்த நாளில் ..
பொங்கலை ஊட்டும்
நல்ல உள்ளம் தான் எங்கள் உள்ளம் ..
அறுவடையில் நல்ல விளைச்சளுக்காக
காத்திருக்கும் எங்களுக்கு..
நீயும்
உன் வெள்ள உள்ளத்தை காட்டுமாறு..
அந்த வெல்லம் பொங்கலை
உனக்காக பொங்க வைத்தும்
வரவேற்கிறோம் ...
வாரும் தாயே .....