டில்லிபாபுபொ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : டில்லிபாபுபொ |
இடம் | : தரமணி,சென்னை. |
பிறந்த தேதி | : 20-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 7 |
அன்பு நண்பர்களுக்கு என் முதல் வணக்கம். என் பெயர் டில்லிபாபு.பொ. நான் பிறந்து வளர்ந்த ஊர், என் சொந்த ஊர் திண்டிவனம் அடுத்த காட்டுசிவிரி. தற்பொழுது சென்னை தரமணியில் வசிக்கிறேன். எனது இலட்சியம் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குனர் ஆவது. அதற்கான முயற்சியில் உள்ளேன். தற்பொழுது குறும்படங்கள் இயக்கி வருகிறேன்.
மேலும் : 8189924960.
புருவங்கள் அசைத்து,
என் புலமையை பறிக்கும்,
புதுமை புதுமை பூவே;
இரு இதழ்கள் இணைத்து,
புது விதி செய்யும்,
முத்தம் ஒரு நொடி சாவே.
என் கண்கள் சொல்லுதே
உன் காதலை.
என் நெஞ்சம் சொல்லுதே
உன் ஆவலை.
நீ தலையில் சூடிடும் பூக்காளால்;
நான் பூத்தேன் உந்தன் நெஞ்சிலே,
நீ நொடியில் பார்த்திடும் பார்வையில்;
நான் உறைந்தே போனேன் உன் கண்களில்,
என் இதயத்தில் துடித்திடும் பெண்ணுயிரே...
ஆயிரம் கோடி விண்மீன்களை,
அரைநொடியில் எண்ணிப்பார்த்தேன்,
உன் கண்களில்.
இமை தாண்டா
விழிகள் ஏனோ,
இன்று உன் பார்வை
திருடி செல்கிறதே....
கண்முன்னே இருந்த உறவுகள்
விலகிச் செல்கையில்,
கண்கள் ஏனோ கலங்குகிறது.
நேற்றைய நினைவுகள்
நினைக்கையில்,
நெஞ்சம் ஏனோ குமுறி அழுகிறது.
எனக்கென யாரும் இல்லையென்ற போதிலும்,
என் மனம் உறவை நாடுது.
தாய்மனம் அருகினில் இருந்த போதிலும்,
நட்பினை தேடி வாடுது.
- நட்புடன்.
சற்றே கண்ணயர்ந்தேன்,
அதிவேக தொடரி,
தொலைதூர பயணம்,
அதிகாலை நேர குளிர்,
எனை தீண்டும் தென்றல் காற்று,
ஜன்னல் ஓர இருக்கை,
என் அருகில் ஒருத்தி,
சற்றே கண்ணயர்ந்தேன்,
எனக்கு முன்பே அவள் உறங்கியிருந்தாள்,
நான் உறங்கவில்லை,
என்னால் உறங்கவில்லை,
சற்றே கண்ணயர்ந்தேன்,
ஏனோ தெரியவில்லை,
என்னவென்று புரியவில்லை,
என்னால் உறங்க முடியவில்லை,
காரணம் என்னவாக இருக்கும்.?
என் அருகில் இருப்பவளா .?
ஏன் அவளை நான் பார்த்தேன்.?
ஏன் அவள் என்னருகில் அமர்ந்தாள்.?
என் அருகில் மட்டுமே இருக்கை
காலியாக இருந்தது.
எதுவாக இருந்தால் என்ன.?
என்னால் ஏன் உறங்கமுடியவில்லை.?
சற்றே கண்ணயர்ந்தேன்,
காரணம் என்னவாக இ