நட்பினை தேடி

கண்முன்னே இருந்த உறவுகள்
விலகிச் செல்கையில்,
கண்கள் ஏனோ கலங்குகிறது.
நேற்றைய நினைவுகள்
நினைக்கையில்,
நெஞ்சம் ஏனோ குமுறி அழுகிறது.
எனக்கென யாரும் இல்லையென்ற போதிலும்,
என் மனம் உறவை நாடுது.
தாய்மனம் அருகினில் இருந்த போதிலும்,
நட்பினை தேடி வாடுது.
- நட்புடன்.

எழுதியவர் : டில்லிபாபு.பொ (17-Dec-17, 7:31 am)
Tanglish : NATPINAI thedi
பார்வை : 887

மேலே