ஆதி மனத்தின் ஆசை

வெண்ணிற பாதையில்
கருமை கப்பலில்
பயணித்து வருகிறது
உண்மையின் கண்ணீர் !

அதிகாலை ஆதவனை
இரவு வேதனையில்
மனதோடு பயணிக்கிறது
ஆழ்மன கண்ணீர் !

நடுநிசி வெண்ணிலவை
வேற்று மனதில்
சுமந்து தடுமாறுகிறது
சிறுமன வலிகள் !

பகல்நேர ஈட்டிகளை
மென்மை இதயத்தில்
விருப்பமில்லாமல் கடக்கிறது
கடக்க வேண்டிய வலிகளை !

தேனீக்களின் எச்சங்களை
தேவையில்லாமல் உடலோடு
சுமந்து நிற்கிறது
தோட்டத்து பூக்கள் !

இரவின் மடியில்
நேற்று பிறந்த
குழந்தை வாய் போல்
வாழ ஆசைப்படுகிறது
ஆண் மனமும் / மணமும் !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்காரவேல் (15-Sep-25, 10:47 pm)
பார்வை : 28

மேலே