Elumalai Chinnapillai - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Elumalai Chinnapillai |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 1 |
காதல் என்பது என்ன..
கண்ணில் பட்ட அனைவரிடமும்
கேட்டேன்.... கோடி பதில்கள் குவிந்தன
'இன்பமிக்க இனிய பயணம்'
இளம்ஜோடிகள் இயம்பின -
எங்கே இது முடியும் என்றேன்
எதிர்காலம் யாமறியோம் என்றனர்
'உயிரைக் கொல்லுகின்ற நோய்'
உடையவளை தொலைத்தவன் இவன்
மீட்கும் மருந்தும் அதுவே தானோ?
மீண்டவன் மகிழ்ந்துரைத்தான்
கைவளை கழன்று விழ தலைவி
கண்ணீரும் கம்பளையுமாக கரைந்து
பசலையில் நொந்து வாடினாளாம்
பழங்கதை பகர்ந்தாள் சங்கத்து பைங்கிளி
இயற்கையின் தேவை என்றான் அறிஞன்
தீர்ந்த பின் இனிக்குமா? என்றேன்
தேடிய நூல்களில் இல்லை என்றான்
கடவுள் என்றனர் அநேகம் பேர்
கற்பனை என்றனர் ஒரு சிலர்
கனவு என்றனர் அறிய
சித்திரை முதல் பங்குனி வரை என் காதல்
சித்திரை மாதம் சித்திரம் போல் அவளை கண்டேன்
வைகாசி மாதம் வாகைகுளத்தில் அவள் மீது காதல் கொண்டேன்
அவளோடு என் காதல் சொல்ல
ஆனி மாதம் முழுதும் பின் நடந்தேன்
ஆடிமாத இறுதியில் தள்ளுபடிபோல் ஒர் காதல் கடித்தை கையிலேந்தினேன்
ஆவலோடு வாங்கிய அவள் ஆவனியில் கிளித்து தந்த கடிதத்தைக் கண்டு மனம் வருந்தினேன்
தேரடி கோவிலில்
அவள் புராணம் பாடிய புரட்டாசி மாதத்தில் அதிகாலையில் நான் எழுந்தேன்
கடைக்கண்ணால் ஜாடை செய்த ஜப்பசியில் ஐயம் கொண்டு தவித்தேன்
காா்த்திகை மாதம் அவள் தீபம் ஏற்ற அது அணையும் வரை தினம் காத்திருந்தேன்
மாா்கழி குளிரில் அவள் கோலம் வரைய
அன்பின்
அடிப்படை
அலகு
மொழிபெயர்ப்பு
தேவைப்படாத
மொழி
மூச்சடக்கி
முயற்சிக்கும்
யோகம்
இடந்தோறும்
இடம்மாறும்
இறை
இதழ்மையால்
எழுதும்
கவிதை
காதல் என்ற
அருவ நோயின்
உருவ மருந்து
உதடுகள்
திறக்காமல்
உண்ணும் முயற்சி
கலவிக் கலையின்
பிள்ளையார் சுழி
அவசர பசிக்கு
நொறுக்குத் தீனி
காதலால்
காதலில்
துடிக்கும் உயிரின்
இதயச்சத்தம்
முத்....தம் , முத்....தம் , முத்....தம்
கட்டில் யுத்தத்தின் தொடக்கம் முத்தம்
யுத்தமுடிவின் முடிவும் முத்தம்
முத்தத்தால் முத்தம் முடிக்க
முயற்சிக்கும் முடிவில்லா யுத்தம் முத்தம்
வெற்றிக்கு பரிசும், தோல்விக்கு தண்டனைய