Elumalai Chinnapillai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Elumalai Chinnapillai
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Nov-2017
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  0

என் படைப்புகள்
Elumalai Chinnapillai செய்திகள்
Elumalai Chinnapillai - Rajesh Kumar அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 10:09 am

கமல் கடவுள் கவிதை | கிரகணாதி கிரகணங்கட்


கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காத தாம்
அதைப் பயந்ததை யுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி
பெரிதேதும் வழியில்லை யாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்றது
விதியொன்று செய்வித்த தாம்
அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாகச் செவிடாக மலடாக முடமாகக்
கரு சேர்க்கும் திருமூலமாம்
குஷ்டகுஹ்யம் புற்று சூலைமூலம் எனும்
குரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின்
புதுஜென்மம் தந்தருளு மாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாட லாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன்நின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி
மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்த தும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்ட தும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும்
பரிவான பர பிரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமார தொழு சக்தியை
மற்றவர் வையுபயங் கொண்டுநீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்
ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிகச்சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தி யை
தையடா ஊசியிர் தையனத் தந்தபின்
தக்கதை தையா திரு
உய்திடும் மெய்வழி ஊதாசினித்த பின்
நைவதே நன்றெனின் நை

மேலும்

கமல் டா🔥 25-Nov-2024 9:02 pm
அருமை தோழரே 16-Jan-2015 3:06 pm
Elumalai Chinnapillai - ரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2018 8:50 pm

காதல் என்பது என்ன..
கண்ணில் பட்ட அனைவரிடமும்
கேட்டேன்.... கோடி பதில்கள் குவிந்தன

'இன்பமிக்க இனிய பயணம்'
இளம்ஜோடிகள் இயம்பின -
எங்கே இது முடியும் என்றேன்
எதிர்காலம் யாமறியோம் என்றனர்

'உயிரைக் கொல்லுகின்ற நோய்'
உடையவளை தொலைத்தவன் இவன்
மீட்கும் மருந்தும் அதுவே தானோ?
மீண்டவன் மகிழ்ந்துரைத்தான்

கைவளை கழன்று விழ தலைவி
கண்ணீரும் கம்பளையுமாக கரைந்து
பசலையில் நொந்து வாடினாளாம்
பழங்கதை பகர்ந்தாள் சங்கத்து பைங்கிளி

இயற்கையின் தேவை என்றான் அறிஞன்
தீர்ந்த பின் இனிக்குமா? என்றேன்
தேடிய நூல்களில் இல்லை என்றான்

கடவுள் என்றனர் அநேகம் பேர்
கற்பனை என்றனர் ஒரு சிலர்
கனவு என்றனர் அறிய

மேலும்

சரணாகதி என்றனர் சித்தர்கள் சலனம் என்றனர் காதல் பித்தர்கள் தூய்மை என்றனர் துறவிகள் துக்கம் என்றனர் சில பிறவிகள் 😊 அற்புதம் 😊 16-Nov-2018 2:57 am
ஆஹா அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 14-Nov-2018 11:48 pm
Elumalai Chinnapillai - சஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2017 7:16 pm

சித்திரை முதல் பங்குனி வரை என் காதல்

சித்திரை மாதம் சித்திரம் போல் அவளை கண்டேன்

வைகாசி மாதம் வாகைகுளத்தில் அவள் மீது காதல் கொண்டேன்

அவளோடு என் காதல் சொல்ல
ஆனி மாதம் முழுதும் பின் நடந்தேன்

ஆடிமாத இறுதியில் தள்ளுபடிபோல் ஒர் காதல் கடித்தை கையிலேந்தினேன்

ஆவலோடு வாங்கிய அவள் ஆவனியில் கிளித்து தந்த கடிதத்தைக் கண்டு மனம் வருந்தினேன்
தேரடி கோவிலில்

அவள் புராணம் பாடிய புரட்டாசி மாதத்தில் அதிகாலையில் நான் எழுந்தேன்

கடைக்கண்ணால் ஜாடை செய்த ஜப்பசியில் ஐயம் கொண்டு தவித்தேன்

காா்த்திகை மாதம் அவள் தீபம் ஏற்ற அது அணையும் வரை தினம் காத்திருந்தேன்

மாா்கழி குளிரில் அவள் கோலம் வரைய

மேலும்

நன்றி தோழரே ............... 18-Dec-2017 7:59 pm
மாத முறைகளில் காதல் நிலைகளை விளக்கியது அருமை . 17-Dec-2017 6:45 pm
நன்றி தோழி ............ 16-Dec-2017 7:47 pm
aaha ... Arumai ... Maadhathil manathai vivarithu vitaai... sirapu!!! 16-Dec-2017 7:44 pm
கருத்துகள்

மேலே