நிழல்தாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிழல்தாசன்
இடம்:  மட்டக்களப்பு
பிறந்த தேதி :  30-Oct-2003
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2018
பார்த்தவர்கள்:  170
புள்ளி:  36

என் படைப்புகள்
நிழல்தாசன் செய்திகள்
நிழல்தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2024 9:04 pm

ஆழ் நெஞ்சில் பெயர் பொறித்தேன்
நாள் முழுதும் அவள் நினைவு
எண்ணமெல்லாம் அவளை சுற்ற
கன்னத்தால் வழிகிறது கண்ணீர்
இழந்த பொக்கிஷமாய் அவளை நினைத்து
குழந்தை மனம் அழுகிறது
வைகை ஆறாய் வழிகிறது கண்ணீர்
கைகளில் எனைத் தாங்க அவள் இல்லை
சிலை அவளை சில நிமிடம் பார்த்ததால்
அலை கடலாய் மனம் ஆர்ப்பரிக்கிறது
பட்டி ஒன்றை தந்து என் கையை அவள்
பற்றி பிடித்ததாய் உணர்கிறேன்
மாளிகை ஒன்று மனம் விரும்ப கட்டி
நாழிகை ஒவ்வொன்றும் அவளுடன் கழிப்பேன்
இந்த நொடி நெஞ்சம் இடிக்கிறது
ஐந்து நிமிடம் உன்னுடன் வேண்டித் துடிக்கிறது

மேலும்

நிழல்தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2024 10:05 am

ஒரு மாதம் கழித்து அவளை காண்கிறேன்ஓர விழியால் அழகை ரசிக்கிறேன்நெஞ்சில் நிறைந்தவள் தொலைவில் இருக்கநெருப்பை பற்றி புகைகிறேன்ஐந்தடி தூரத்தில் இருந்தாலும்ஐவிரல் பிடித்து கோர்க்கவில்லைகண்ணுக்குள் அவள் பதிந்திருந்தாலும்கள்வனைப் போல பார்க்கிறேன்பச்சை உடுத்திய தேகம்பட்டு நார் போல் கூந்தல்பேரழகிக்கு அர்த்தம் தேடினால் இவள்பெயரே பதிலாக கிடைக்கும்ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் ஆழப்புதைந்துஆவலுடன் காத்திருக்கும் அந்த தருணம்இருவர் கைகளும் இணைந்துஇணைபிரியா வாழ்வை தொடங்க

மேலும்

நிழல்தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2024 3:57 pm

வரமொன்று கேட்கிறேன் தந்திடு இறைவா
கரம் பிடித்து நடக்க என் காதலி வேண்டும்
கொஞ்சி விளையாடி கன்னத்தை கிள்ளி
நெஞ்சில் கட்டி அணைத்திட வேண்டும்
தலை சாய்த்து அவள் செஞ்சினில் சாய
அலை போன்ற கூந்தலை வருடிட வேண்டும்
உற்று அவள் கண்களை நோக்கி
நெற்றியை பிடித்து முத்தமிட வேண்டும்
பட்டாடை உடுத்த பேரழகி அவளை
மெட்டி அணிவித்து மனைவியாக வேண்டும்
சோலை பூப்போல் அழகிய விழிகள்
காலம் முழுவதும் ரசித்திட வேண்டும்
கைகளை தொட்டு விரல்களை பிடித்து
வைர மோதிரம் அணிவிக்க வேண்டும்
பேராசை தான் எனக்கும் தெரியும்
அழகிக்கு ஆசைப்படலாம் பேரழகிக்கு ?

மேலும்

நிழல்தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2024 11:22 am

கண்மூடி அவளை நினைத்தேன்
கண்ணீராய் கொட்டியது
தொலைபேசி நிதம் பேசினாலும்
தொலைதூரம் குறையவில்லை
ஒட்டி நின்று புகைப்படம் எடுத்து
கட்டித் தழுவ நினைக்கும் நெஞ்சம்
கை பிடித்து வெகு தொலைவு நடந்து
கைதியாய் உன்னிடம் வாழ நினைக்கும்
விழியோடு விழி பாராமல்
வழியிலே துடிக்கிறேன் பெண்ணே
ஒரு சில நொடிகள் மட்டுமாவது
ஓரக்கண்ணால் பார்க்க வேண்டும்
கோலம் போட்ட உன் விழிகளை காண
காலம் இட்ட வேலி இதுவோ
நித்தமும் உன் நினைவால் ஏங்குகிறேன்
முத்தம் ஒன்று தர மாட்டாயா

மேலும்

நிழல்தாசன் - நிழல்தாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2023 10:33 pm

மிட்டாயை போல இனிக்கின்றன உன் விழிகள்
பட்டாடை உனக்குடுத்தி மாங்கல்யம் சூட்ட நினைத்தேன்
தொட்டாலும் பாவம் என விலகி நீ ஓடுகிறாய்
விட்டாலும் அகலாது நெஞ்சை விட்டு உன் நினைவு

மேலும்

ஐயா தங்கள் கருத்துக்கும் என் மேலும் தமிழ் மேலும் கொண்ட அக்கறைக்கும் நன்றி. என் படைப்புகள் மட்டும் ஒளியில் இருந்தால் போதும். எனக்கு வெளிச்சமோ விளம்பரமோ தேவையில்லை. நிழலிலேயே இருக்க நான் ஆசைப்படுகிறேன். அதனால் தான் நிழல்தாசன் என்ற பெயரிலேயே எழுதுகிறேன் 28-May-2023 3:23 pm
நிழல் தாசனாரே உமது உண்மைப் பெயரை ஏன் மறைத்த்ல்.... நிஜப்பெயர் என்ன அவ்வளவு அறுவருப் பாகவா பெற்றோர் வத்துள்ளார்கள். .... பெற்றோர் வைத்த பெயரை விளங்க விடவும். உங்களின் கருத்து மரபுக்கவிதை படைக்க பொருத்தமாகத் தெரியவே நேரிசை வெண்பா வாக திருத்தி அமைத்துள்ளேன்.. கருத்துக்கு பாராட்டுக்கள்... மரபில் எழுதி தமிழை வாழ வையுங்கள் 28-May-2023 11:23 am
மேலும்...
கருத்துகள்

மேலே