கவியின்பன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவியின்பன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 08-Oct-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 0 |
கவி மற்றும் எழுத்துக்கள் மேல் தீரா பற்றுக்கொண்டவன்...
காதல் உலகில்
கவலை என்ன
நிலையா...?
கவலையில்லா
காதலில்
கவலை வாழ்வு
எங்கே..?
காமம்
இல்லா காதலில்
காமம் எங்கே...?
உன்னோடு
இல்லா வாழ்வில்
உயிர் எங்கே...?
பொய்மையில்லா
உலகில்
உண்மை எங்கே...?
உண்மையில்லா
வாழ்வில்
சிறை எங்கே...?
கதறிய அழுக பின்
கண்ணீர் துளி
எங்கே...?
கவிஞன்
இல்லா உலகில்
கடவுளின
கனவு எங்கே...?
கனவில்லா
வாழ்க்கையில்
கதை எங்கே...?
பொய்மை
அல்ல
பொய்மையில்லா
வாழ்வில் உண்மை
இல்லை
காசு நிறைந்த உலகில்
காமம் கண்ட உலகில்
காதல் கொண்ட உலகில்
கற்பனை நிறைந்த உலகில்!
உண்மை நிலையா
பொய்மை நிலையா
கனவு நிலையா
கற்பனை நிலையா....?
வயல் இருந்த இடத்தில்
அரிசி ஆலை
தொடங்கியது அரிசி உற்பத்தி !
***********
தயாரானது மைதானம்
தாகத்தில் பறவைகள்
நீர் வற்றிய குளம் !
************
மழை பெய்தும்
மலடாகவே மண்
மக்காத குப்பை !
*************
கொளுத்தும் வெயிலிலும்
காற்றை நனைந்தது
வெட்டியமரத்தின் உதிரம் !
**************
விதை விதைத்தவன்
அறுத்தான் தன் கழுத்தை
விவசாய தற்கொலை !
***************
பொழுதுப் புலர்ந்தது
கூவத்தொடங்கியது
ஒலிப்பெருக்கி !
***************
பட்டப்பகலில் வெட்டிக்கொலை
கண் மூடி கடந்துபோனேன்
செய்தித்தாளில் !
****************
கலப்புத்திருமணம்
முடிந்தது
கவுரக் கொலையில் !
21/3/2016 இன்று தினமணி / கவிதைமணியில் என் கவிதை அரங்கேறியுள்ளது....