VaadakaikKaaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  VaadakaikKaaran
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Oct-2017
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  2

என்னைப் பற்றி...

எழுத்துக்களால், வளமாக்குவோம்!

என் படைப்புகள்
VaadakaikKaaran செய்திகள்
VaadakaikKaaran - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2017 9:00 pm

ஆழக்கடலுக்கும் கரைகள் உண்டு!

ஏறாத மலைக்கும் ஒரு அடிவாரம் உண்டு!

ஒவ்வொரு வெற்றிக்கும் பல தோல்விகளும் உண்டு!

கரையில் நின்றால், கால்கள் நனையலாம்,
அலைகளை வென்று, ஆழ்கடலில் முத்தெடுக்க முடியுமா?

அடிவாரத்தில் இருந்தால், காற்று வாங்கலாம்,
பாறைகளை வென்று, உச்சியை எட்டி சாதிக்க முடியுமா?

தோல்விகளுக்குப் பயந்தால், பாரமாய் வாழலாம்,
தடைகளை வென்று, இலட்சியத்தை அடையமுடியுமா?


இடையூறுகளே, வெற்றியை நெருங்க வைக்கும்!

எண்ணத்தில் உறுதி கொண்டு, வெல்வோம் தோல்விகளை!

முயற்சிகள் வலுவாகும்! இலட்சியங்கள் ஈடேறும்!!

மேலும்

ஆயிரம் முறை கண்ணீர் சிந்தினால் தான் ஒரு முறை மனம் விட்டு சிரிக்க முடியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 10:57 am
VaadakaikKaaran - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2017 8:55 pm

எல்லோருக்கும், எப்போதும்
எவ்வித வேறுபாடும் கொள்ளாது,
இலைகளை,கனிகளை,வேர்களை,
தன் நிழலை, நல்ல காற்றை வழங்கும்,
மரங்கள் போல், நாம் இல்லைதான் !

ஆயினும்,

நமது வருங்கால தலைமுறைகளுக்கும்,
தன்னலம் இல்லா மரங்களின்
உன்னத சேவைகள் தொடர,

விட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டாமல் ?!

நட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டிய இடமெல்லாம்?!

மரங்களைப்போல, மனங்கள் இல்லாவிடினும்,
பட்ட கடனுக்காகவாவது...?!

மேலும்

வாடகை பூமியை ஆயுளைக்கடந்து சேதம் செய்கிறது மனித இனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 16-Oct-2017 10:45 am
கருத்துகள்

மேலே