நவரதராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நவரதராஜன் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 16-Oct-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-May-2015 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 0 |
தமிழ்நாடு அரசுப்பணியில் உதவி இயக்குநராகப்பணி புரிகிறேன்.தமிழின்பால் அதிக ஈர்ப்புண்டு.அவ்வப்போது கவிதை என ஏதாவது முயற்சித்ததுண்டு.அவற்றுள் எதையும் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை.எல்லாம் என்டைரியில் தூங்குகின்றன.யாரறிவார் அவற்றில் சில எழுத்துஇதழிலும் வெளியாகலாம்.
ஒரு மாலை பொழுதில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்த அவன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்?
காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றேன்...
காற்றை உன்னால் வாங்க முடியாது
காற்றுதான் உன்னை வாங்கிக் கொண்டிருக்கிறது...
வாழ்கையின் வரவு செலவுகளை
உனது சுவாசத்தின் வழியே
சரி பார்த்துக் கொண்டிருக்கிறது...
காற்று எப்போதும்
உன் கையில் சிக்குவதில்லை என்றான்...
ஏ பித்தனே...
நான் நினைத்தால் ஒரு பலூனில் அடைத்து
எனது கைக்குள் கைதியாக்கி விடுவேன் என்றேன்...
வெடித்து விடுதலையடைவது
எப்படி என்று காற்றுக்கு தெரியும்
கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும்
காற்றுக்கு எல்லாம் தெரியும் என்றான
வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;
பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !
* * *
சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?
உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !
* * *
மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..
என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !
* * *
காந்தம்
மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...
இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...
குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...
அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...
கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன?
எவ்வள
மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...
இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...
குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...
அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...
கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன?
எவ்வள
வடமேற்குதிசைதோன்றி
வருகின்றவழியெல்லாம்
வளஞ்சேர்த்துப்புகழ்பெற்ற
வண்ணமகள் காவேரி
இன்று குடஞ்சேர்க்கும் நீர்கூடக்
கொடுப்பதற்கு வழியில்லை!
தடமமெல்லாம் மணற்பரப்பு
தகிக்கும் ஆதவன் கொதிப்பு
கட்டடங்கட்ட இடந்தேடியலைவோர்க்கு
காவிரியின் மணற்பரப்பு சரியான
இடமாச்சு
நதிநீர்களையிணைப்போமென
நாள்தோறும்பேச்சு
விதியெண்ணி மக்கள் தினம்
விடுவர் பெருமூச்சு!