கவி சோலை கமுருகேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி சோலை கமுருகேசன்
இடம்:  வெம்மணி
பிறந்த தேதி :  02-Sep-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  298
புள்ளி:  56

என்னைப் பற்றி...

விவசாய குடும்பத்திலிருந்து பிறந்த ஏழ்மையான இந்த மனிதன்
சிருவயதிலுருந்தே கவிதையை நேசித்தவன் . வயல் வெளியில்
வேலை பார்த்துவிட்டு கலைப்பாரும்போதேல்லாம் இயற்கையை
பற்றி எழுத பிடிக்கும்.

என் படைப்புகள்
கவி சோலை கமுருகேசன் செய்திகள்
கவி சோலை கமுருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 5:23 pm

அதிசயமே அதிசயிக்கும்
அழகு!
அங்கீகரிக்க அறிவியல் தேடும்
மிளகு!
உன்னருகே நானிருந்தால்
உறைந்துவிடும்
உலகு!
மேனியெல்லாம் பூசியிருக்கிறதோ
மெழுகு!
மெத்தனத்தில் எனைவிட்டால்
மெது மெதுவாய்
விலகு!

மேலும்

கவி சோலை கமுருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2017 2:08 pm

காற்றை கயிறாக்கி
கீற்றை முடைந்து
களைப்பாறும்
கூற்றை அடைந்தவனே!
நீ
சேற்றை அளந்துபார்த்து
செவிக்கினிய
சாற்றை சதற்கினிந்து
சரீரம் பெற்றவனே!
சிறந்ததை
செய்ப்பொழுது
பிறந்ததை பேணாக்கிடின்
துறந்ததை
துயில் மறந்து
குயில் பாடும்
இசையோடு
வாழ்க பல்லாண்டு !

மேலும்

கவி சோலை கமுருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2017 3:03 pm

ஏதோ உன்னிடம்
இருக்கிறதாம்!
அறியாமல் நான்
அடைபட்டு
ஏதேதோ
செய்துவிட்டேன்!
மயக்கத்தில் என்
இயக்கம் தெரியாமல்
தயக்கம் கொண்டது
தரிகெட்டுப்போன வாழ்க்கை!
உயர்ந்த பின்
உச்சியில்
பார்க்கும்போதுதான்
பிச்சியில் பூத்ததும்
பிஞ்சில் பழுத்ததும்
நெஞ்சில் தெரிகிறது!

மேலும்

கவி சோலை கமுருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2017 2:52 pm

ஒருவர்: என்னங்க இந்த ஆடு கத்திகிட்டே இருக்கு
இன்னொருவர்: அருக்குறதுக்கு கத்தி கிட்ட இருக்குறதுனாலே!

மேலும்

கவி சோலை கமுருகேசன் - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2015 12:23 pm

இறவாமல் பிறந்தாளோ
என் அன்னை
பெண் குழந்தை வடிவிலே...
****
பிறந்த தளிரின்
பாதம் முகர்ந்தேன்
அந்த பாத மலருக்கு
இணையாக
எந்த முல்லை மலரும் மணக்கலையே....
****
மழலை பாதம்
கொடுத்த ஸ்பரிசம்
உயிரின் வேர் வரை
உன்னதம் பேசும்.....
*****
அவளின் பொக்கை வாய் சிரிப்பு
எனக்கு
"பொக்கே" கொடுத்ததாய் களிப்பு
*****
அக்கா, தங்கையோடு
பிறவாதவனுக்கு
ஆண்டவன் தரும் நஷ்டஈடு
பெண்குழந்தை
*****

மேலும்

தோழரே = தோழி ( மன்னிக்கவும் ) 28-Feb-2015 2:37 pm
ஏக்கத்தின் தவிப்புகள் வரிகளில் கவியாக அருமை தோழரே .......... 28-Feb-2015 2:36 pm
நன்றி தங்களின் முத்தான கருத்திற்கு 28-Feb-2015 2:14 pm
மிக அருமை படித்தேன் ரசித்தேன் 28-Feb-2015 1:41 pm
மேலும்...
கருத்துகள்

மேலே