சமூன் அலி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சமூன் அலி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 202 |
புள்ளி | : 18 |
தென்னை ஓலை விசிறி எங்கே ?பனை ஓலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே? கிச்சு கிச்சு தாம்பாளம் எங்கே?
தெல்லு விளையாட்டு எங்கே ? கோபிபிஸ் விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே?
கும்மி எங்கே? கோலாட்டம் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே? ஊனாங்கொடி ரயில் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே? குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே? இஞ்சி மரப்பா எங்கே?
கோலிகுண்டு எங்கே? கோலிசோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே? கரிப்பழம் எங்கே?
கள்ளிப்பழம் எங்கே? இளுவான் எங்கே?
இலந்தைப்பழம் எங்கே? சீம்பால் எங்கே?
ரோஷம் வளர்த்த கொங்க மாட்டுப்பால்
தேன்கூடு!
.....................
இது ஓய்வே இல்லாத
பரபரப்பான ஒரு சந்தை !
இறை வன் என்ற வரை கலைஞனின்
மற்றொரு விந்தை !
அரக்கு மாளிகை
அருகே சென்று நீ
உற்றுக்கேட்டால் உனக்குக்
கேட்கும் ஒலிப்பேரிகை!
நிலாக்காலம்
இங்கு மிகக்கொடுமையான
பஞ்சம் தேனும் அளவிலே குறையும்
வசந்த காலத்தில்
மார்புகள் சுரந்து தேன் தானே ஒழுகும் !
கல்லெறிந்தால்
கண்ணாடி மட்டுமல்ல
இதுவும்தான் சிதறிவிடும்!
இந்தக்கோபுரம்
கலைவதும்
மீண்டும் கட்டப்படுவதும்
ஒற்றை ராணியின்
முடிவில்தான் !
சில சோம்பேறிகள்
இங்கு சாகும்வரை அடிமைகள்!
சில வீரர்களுக்கோ
எந்நாளும் ஓயாத போர்தான் !
ஊமை மலரின்
சோகக் கண்ணீரை
மலரிடம்