varna - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : varna |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 6 |
தீப்பிடிப்பது போல உள்ளுக்குள் காதலைப் பற்றவைக்கிறது உன் பார்வை. இனி நாம் சொல்லிக் கொண்டால் இந்த சுவாரஸ்யம் செத்துப் போய்விடக்கூடுமென்பதால் விழிகளால் பேசிக் கொண்டிருக்கிறோமே இந்தக் கணம்...
இந்தக் கணத்தில்தான் காலம் காலமாய் கடவுளென்னும் ஆதி உணர்வு வசித்துக் கொண்டிருக்கிறது பெண்ணே.
கள்ளத்தனமாய் நீ பார்....
கவனமாய் புன்னகை செய்....
பாராதது போல எப்போதும் திரும்பிக் கொள்...
காதல் நம் விழிகளிலேயே
ததும்பிக் கிடக்கட்டும்....
வார்த்தைகளற்ற
வெளியில் சிறகடித்துப் பறக்கட்டும்
இந்த உணர்வு....!
"என்னடா மச்சி ஆள ரொம்ப நாளா காணோம்..
""ஒன்னும் இல்லடா மனசு சரியில்ல மச்சி..."
"என்ன மனசு சரியில்லையா?
டேய்... என்னடா சொல்லுற?
அதான் எந்த நேரமும் காதல் காதல் எண்டு பறந்து திரிவாயே...
இப்ப என்ன ஆச்சு? "
"அந்த அந்த பாழாப்போன காதல் தந்த பரிசுதான் மச்சி இந்த நிலைமை..."
"அதானே பார்த்த என்னடா மச்சி மூஞ்சி சும்மா வாழைகுலை மாதிரி தொங்குதே எண்டு...."
"டேய் சும்மா போடா.. நானே வெந்துபோய் இருக்கன்.."
"அது சரி மச்சி என்னடா நடந்துச்சு...
உன்ன அவளுக்கு பிடிகலையா? என்ன சொன்னா?"
"மச்சி நீ சொன்னமாதிரி காதலர் தினத்தன்று,
நீ எழுதிதந்த கவிதைய கொடுத்து என் காதல சொன்னன்டா.. ஆனா அவள்...........
மறக்க முடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் இதயம்
அருகிலிருந்தும் தனிமை
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கின்றேன்
நினைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்கின்றேன்
வெளியே வந்து பார்
எத்தனை முறை உன்னை நினைத்தேன் என்று......
அன்றொரு நாள் என் தேவதையை கண்டேன்
பார்த்த கணமே என் இதயத்தை தொலைத்து விட்டேன் என்னவளிடம்
அவள் மௌனத்திலும் அவள் கண்கள் பேசும்
அவளின் கூர்மையான பார்வை என் மீது காதல் அம்பாய் தொடுத்தது
என்னவளின் சிரிப்பினிலே பித்தனானேன்
எனது தேவதையின் அழகிய முகம் கண்டு
நான் என்னையே மறந்தேன்
எங்கும் என் தேவதையின் பிம்பம் பிரதிபலித்தன.
அன்று விழுந்தவன் தான்
இன்று வரை மீள முடியவில்லை
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
என் காதல் தேவதையின் நினைவிலேயே!!!!
-வர்ணா