எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனக்கா சொந்தம்...!!!

மண்ணிற்குள்
விழுந்த பின்னும்
நான்
விதைத்த விதைகள்
விருட்சமாகலாம்!

நீண்ட
கிளைகள்- பறவைகள்
தாங்கும் கூடமாகலாம்!

அசையும்
இலைகள்-வெம்மையை
தணிக்கும் கூரையாகலாம்!

சிரிக்கும்
மலர்கள்-தேனீக்கள்
திருடும் மகரந்தமாகலாம்!

பிறக்கும்
காய், கனிகள்-அனைவரும்
உண்ணும் உணவாகலாம்!

தாங்கும் விழுதுகள்-குருவிகள்
ஆடும் ஊஞ்சலகலாம்!

நீ-பிரியும் வரை
பேணிபராமரிதிருக்கலாம்!
ஆயிரம்
காரணம்-சொன்னாலும்
நீ விதைத்த விதை
உனக்கு சொந்தமாகுமா?
விதைத்த உன் முகவரி தான்
வேரில் பதிந்திருக்குமா!!!

https://plus.google.com/101825645211362267228/posts/Q4gD8pseLjM




(...)

மேலும்


மேலே