தூஉய்மை யென்ப தவாவின்மை - அவாவறுத்தல்
குறள் - 364
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
வாஅய்மை வேண்ட வரும்.
Translation :
Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.
Explanation :
Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.
எழுத்து வாக்கியம் :
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
நடை வாக்கியம் :
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.