எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் வலிகள்..!!!!!! நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை தவிர...

காதல் வலிகள்..!!!!!!

நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......

நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....

என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...

ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியாதது போல்
என் முன்னால் அமர்ந்து கொண்டு.......
அது தானடி வலிக்கிறது அடி மனதில்...!!!

தோழிகளோடு ஆரவாரமாக பேசிக்கொண்டு
வரும் நீ என்னை கடக்கையில் மட்டும்
அமைதியாகி விடுகிறாயே...!!!
அதை பார்த்து தான் உறுதி செய்து கொள்கிறது
என் மனம் நீயும் என்னை காதலிக்கிறாய் என்று...

நீ என்னை கடக்கும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என் மீது இரக்கப்பட்டு
சில வார்த்தைகளை சிணுங்கி போகிறது
ஆனால் நீ........ ??????

ஒவ்வொரு சந்திப்பின் போதும்...
உன் புன்னகையை சிதறவிட்டு...
என் இதயத்தை அல்லவா
அள்ளிக்கொண்டு போகிறாய்.....!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான்
முடிக்கிறேன் என் ஒவ்வொரு கவிதையையும்
உயிர் உள்ள காலம் வரை....
உன் நினைவு வற்றவா போகிறது என்னிலிருந்து.....!!!!!!

நாள் : 9-Sep-14, 4:49 pm

மேலே