மறந்தும் உறவை மறவா மனம் வேண்டும் மழையில் நனைந்தும்...
மறந்தும்
உறவை
மறவா மனம் வேண்டும்
மழையில்
நனைந்தும்
மறையா மணம் வேண்டும்
இரந்தும்
பிறருக்கு
கொடுக்கும் குணம் வேண்டும்
இறக்குமுன்
நோயில்லா
வாழ்வு தினம் வேண்டும்
கறக்கும் பசு
வேண்டும்-ஆசைகள்
துறக்கும் திசு வேண்டும்
சிறக்கும் கவி
வேண்டும் -வளங்கள்
பிறக்கும் புவி
வேண்டும்
மயக்கும் காலை
வேண்டும் -பசுமை
கொழிக்கும் பாலை
வேண்டும்
வழுக்கும் சாலை
வேண்டும்- -பூக்கள்
சிரிக்கும் சோலை
வேண்டும்
கடிந்து சொல்லா
சொல்வேண்டும் -திறம்
ஒடிந்து போகா
வில்வேண்டும்
உடைந்து சாகா
பல்வேண்டும் -என்றும்
தளர்ந்து வீழா
புல் வேண்டும்..
சுசீந்திரன்.