எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள உறவுகளுக்கு வணக்கம்..! நமது சக படைப்பாளி...

எழுத்து தள உறவுகளுக்கு வணக்கம்..!

நமது சக படைப்பாளி தோழர் பழனிகுமார் அவர்களின் உணர்வலைகள் கவிதை தொகுப்பு வெளியிடப்படும் செய்தியை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள்..! உங்களின் வாழ்த்துக்களோடு எனது வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.!
மேலும் நூல் வெளியீட்டு விழாவன்று சென்னையில் இருந்தும் விழாவிற்குப் போக முடியாதவர்கள்..சென்னைக்கு வெளியே வெகு தூரத்தில் இருப்பவர்கள்,மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தோழர்களின் நலன் கருதி..விழாவை நேரடி ஒளி பரப்பு செய்யவும் ஏற்ப்பாடுகள் செய்யப் பட்டிருக்கிறது. விழா துவங்கும் நேரத்தில் இருந்து.. "www.irswamividios.in /unarvalaikalbook.aspx " என்ற இணைப்பில் விழாவைக் காணலாம்.
சென்னையில் இருக்கும் தோழர்கள் அனைவரும் விழாவில் பங்கு பெற்றால்.. அது மிக நல்லது. ஏன் எனில் ஒரு படைப்பாளியைக் கௌரவப் படுத்தவும்,அவர் மீதான நமது மதிப்பை வெளிப் படுத்தவும் இது நமக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றே நான் கருதுகிறேன்.
இதனை வாசித்தவர்கள்.உங்கள் மனவிசாலத்தைக் காட்டும் வகையில் பகிர்ந்தால், இன்னும் நல்லது..! நன்றி..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி

நாள் : 10-Oct-14, 9:20 pm

மேலே