எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கானல் நீர் கண்டு... மலர்ந்த மலர்களாய்.. பெண்ணே நான்...

கானல் நீர் கண்டு...
மலர்ந்த மலர்களாய்..
பெண்ணே நான் இன்று...
உன்னால் வாடி போகிறேன்...!

நீ அறிவாயோ..
உந்தன் காதல்....
எந்தன் மனச்சோலையை
கருக்கி போனதென்றும்...!

உன் நினைவுகள் விதைத்த..
என் மனதிற்குள்..
இன்றும் பலநூறு மலர்களாய்
பல்வேறு கனவுகள்...

தினம் தினம் பூத்து
கண்ணீர் மழை கொண்டு..
சோகத்தின் சுழற்சியில்
மெளனத்தில் மடிகிறதென்று...!

எனை உணர்ந்தால் ஒருகணம்
திரும்பி பார்....பெண்ணே
மரணத்திலும் உன்னை மறப்பது..
விதி அல்ல வலியென்றே சொல்வேன்...!

...கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 13-Oct-14, 11:47 pm

மேலே