படித்ததில் பிடித்தது (முகநூல் ) படைத்தவர் Thirugnanasampanthan Lalithakopan...
படித்ததில் பிடித்தது (முகநூல் )
படைத்தவர் Thirugnanasampanthan Lalithakopan
தண்டவாளமும் சிலந்தி பூச்சியும்
தீரா வெயிலின் யாக்கையுள்
புகுந்து சூரிய குஞ்சுகளுடன்
சரசம் செய்தலிலும் உறைபனி
திருடி உருகுதலுக்கான ஒத்திகை
பார்த்து பின் தோல்வி நீரில் நனைவதுமாயே
எனது நாட்கள் நகர்ந்திருந்தன......
காதல் என்பது ஒரு வலிமிகு
அனுபவம்...ரயிலின் இரக்கமற்ற
மிதித்தலை நேசிக்கும் எனது
சாரம் போன நரம்புகளுக்கு...
இரு கரங்கள் தீண்டாத என் அங்கங்களை
எட்டு கரங்களால் அணைத்து கொள்கிறாய்
ஆணின் ரசவாதங்களை கடந்த ஞானி
நீ...பெண்மையின் நளினங்கள் மறந்த
பித்து நான்...மேகங்கள் கறுக்காத நாட்களிலும்
மழையை பிரசவித்த வருண தேசம் நீ....
எல்லா மழை நாட்களிலும் இறுகி
கிடந்தோம் அல்லது இறுக்கி கிடந்தோம்....
விடுதலை என்பது தேசங்களுக்காகவே
இருந்தது....ஒற்றை நூலில் ஆடிக்கிடந்த
சோடி பம்பரங்கள் நமக்காகவல்ல...
உன் வலைக்குள் சிக்கி உனது இரைப்பையின்
சுவர்களுள் நித்திய சமாதி கொள்ளும்
வரத்தை மட்டுமே யாசித்திருந்தேன்
சமிக்ஞை ஏதுமற்று வந்த ரயில்
உன்னை மிதித்து சென்ற கடைசி நாளிலும்....