உன்னுள் புதைத்துவிட்டு என்னுள் தேடுகிறேன் இதயத்தை மண்ணுள் புதைத்தாலும்...
உன்னுள் புதைத்துவிட்டு
என்னுள் தேடுகிறேன் இதயத்தை
மண்ணுள் புதைத்தாலும்
முண்டி வெளிவரும் ஒருநாள்
காத்திருந்து காத்திருந்து
முளைத்தது ஒருநாள் ...
கண்ணீர் துளிகளாக
கசங்கிய இதயமோ-இல்லை
நீ கசக்கிய பழரசமோ
சுவையோ உவர்ப்பு
சுவைக்க முடியாமல் என் தவிப்பு
இது தான் காதலின் நிலையோ....!!