எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொ(ல்)லைக்காட்சி............ பாவி மக ஒரு நாளாவது சாயந்தரம் புருஷன்...

தொ(ல்)லைக்காட்சி............
பாவி மக ஒரு நாளாவது சாயந்தரம் புருஷன் வர நேரத்துக்கு வீட்ட சுத்தப்படுத்தி காபி போட்டு அன்பா வரவேற்று குழந்தைய பாத்துகுராளா எப்ப பாத்தாலும் அந்த டிவி‘ய பாத்துக்கிட்டே உட்காந்து இருக்கா………ஆமாம் அத்தை கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாதவளா இருக்காளே….! அவ தான் அப்படினா அவ மாமியாருக்கும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே என அவர்கள் சீரியலில் வரும் கற்பனை கதா பாத்திரங்களை திட்டி பேசி கொண்டிருக்கும் போதே, வீட்டிற்குள் நுழைந்த ரகு எவ்வளவு நேரம் கத்தி கிட்டு இருக்கேன் வீட்டுக்கு வந்தா தண்ணி குடுக்க கூட யாரும் இல்லையா சுமதி. அம்மா வீடு இப்படி தொறந்து கிடக்கு. குழந்தை அழுதுகிட்டு இருக்கு உள்ள அப்படி அந்த நாடகத்துல என்னதான் பாக்குறிங்க என பொலம்பிக் கொண்டிருந்தான்……………

பதிவு : மங்கை
நாள் : 25-Dec-13, 1:01 pm

மேலே