எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அங்கிள் நான் ஒரு கவிதை சொல்லட்டுமா ........?? கடற்கரையில்...

அங்கிள் நான் ஒரு கவிதை சொல்லட்டுமா ........??

கடற்கரையில் என்னிடம் ஒரு சிறுவன் ...!


" நீயே ஒரு கவிதை தான் டா.. செல்லம் " என்றேன் .

" ஐயோ அங்கிள் ரொம்ப பழைய டைலாக் " எனக்கு நோஸ் கட் ..........!! :(

சரி டா குட்டி சொல்லுடா ......

சொல்ல ஆரம்பித்தான் .........!

கடல் ............கடல் ...........கடல்
அதை விட்டு பிரிந்த மீன்கள்
தரையில் கருவாட்டு கொலை .
அது கொலை இல்ல
கொலை இல்ல
தற்கொலை ..!

ஆமா.... அங்கிள்.......!
கடல நிறையா
உப்பு தண்ணி குடிச்சு
மீனுக்கு ரோசம் வந்துச்சு...........!!



கட்டிபிடித்து முத்தம் கொடுத்தேன் அந்த குட்டி பாரதிக்கு ...........!

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 2-Jan-15, 7:09 pm

மேலே