பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 7...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 7 நாட்கள் விடுமுறை
ஈரோடு, ஜன. 11–
ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை மஞ்சள் மார்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 17–ந் தேதியை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் வருவதால் அந்த தினங்களும் விடுமுறை ஆகும்.
அதன் பின்னர் 20–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் மஞ்சள் மார்கெட் செயல்படும் என்பதை விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.