எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அபி சார், எழுதப்படும் எழுத்து அதற்கான மனச் சித்திரங்களை...

அபி சார்,

எழுதப்படும் எழுத்து அதற்கான மனச் சித்திரங்களை உருவாக்கவேண்டும் ....! விவரிக்கப்படும் காட்சிகள் துல்லியத்தன்மையோடு மனத்திரையில் விரியவேண்டும். சாண்டில்யன் எழுதிய " கடல்புறா " வில் கருணாகர பல்லவனும், அநபாயச் சோழனும் சுங்கச் சாவடியில் தப்பிச் செல்லும் காட்சி ஒன்று வரும். அந்தப் பகுதியைப் படிக்கும் போது அப்படியே அந்தக் காட்சிக்குள் சென்று நின்று கொண்டு நடப்பதைப் பதைபதைப்புடன் பார்ப்பது போன்ற உணர்வைப் பெற முடிந்தது. அதே போல கல்கியும் மனச்சித்திரங்களை உருவாக்குவதில் மகத்தானவர்.
இதுபோலவே, தங்களுடைய சிறுகதைகளும் செதுக்கி வைத்தது போன்ற மனச் சித்திரங்களை உருவாக்குபவையாக இருப்பது மகிழ்வானதொரு வியப்பைத் தருகிறது.

சூப்பர் மார்க்கெட் என்றால் கண் முன்னே ஒரு சூப்பர் மார்கெட் விரிகிறது. ஹேமா என்றால் ஒரு குட்டி ஹேமா மனத்திரையில் புன்னகைக்கிறாள், கீதா என்றால் ஓர் இல்லத்தரசியின் பாந்தமான தோற்றம் மனதில் உருப்பெறுகிறது , அந்த " நான் " என்பது கூட " எவனோ ஒருவன் " பட மாதவன் தோற்றத்திலான ஒரு பிம்பத்தினை மனத்தில் தோற்றுவிக்கிறது.

கதையின் தொடக்கத்தில் எவ்வித வருணனைகளும் இன்றி வெறும் உரையாடல்களிலேயே இவ்வகையான மனச்சித்திரங்களை உருவாக்குவதிலேயே வெற்றி பெறத் தொடங்கிவிடுகிறீர்கள் நீங்கள் !

// // முன்பக்கமிருந்து சுழட்டி,முதுகில் உப்பு மூட்டையாகப் போட்டுக் கொண்டேன் //

நுட்பமான இந்தச் செயல்முறையை விளக்க அளந்து வைத்தது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதில் மனத்திரையில் ஒரு தகப்பன் தன் செல்லக் குழந்தையை வாரியெடுத்து முன்பக்கமிருந்து சுழட்டி முதுகில் உப்பு மூட்டையாகப் போட்டுக்கொண்டு விட்டிருந்தான்.

// என் விரல் பட்டதும்,எதிர்பாராமல் விரலில் சூடுபட்டுக் கொண்டவள் போல ஒரு திடுக்கிடலும் தெரிந்தது //

மனைவி என்றாலும் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் ஏற்படுத்திய கடந்த கால நினைவலைகளால் உந்தப்பட்ட அவள், பழைய காதலியாகவே மாறிவிட்டிருக்கிறாள். இந்தச் சமயத்தில் கணவனது விரல் பட்டதும் அந்நியன் ஒருவனின் விரல் பட்டது போல சூடு பட்டுக் கொண்டு திடுக்கிடுகிறாள். இவ்வாறு மனவோட்டங்களின் நுட்ப பரிமாணங்களை அநாயாசமாகத் தொட்டுச் சென்று கொண்டிருக்கிறது உங்கள் பேனா .....!

// அவள் விருப்பமாய்க் கேட்டுக் கொண்டிருந்த சில பாடல்கள்,எழுதித் தூக்கிப் போட்டிருந்த கவிதைகள் //

இங்கு கணவன், மனைவியை அந்த ஒரு நிகழ்வால் சந்தேகப்பட்டு விடவில்லை. மாறாக அவளை அக்கறையுடன் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறான் என்பதான படிமத்தினைப் பெறமுடிகிறது ! கடந்த காலத்தில் இருந்தே இந்நிகழ்வு சார்ந்த எண்ணப் படிமங்களை அவன் பெற்றிருக்கக் கூடும் என்பதை உணர்த்தும் இந்த இடம் அருமையிலும் அருமை ! மேலோட்டமாக இந்த வரிகளை கவனித்தாலும் கூட இதில் கவிதைத்தனம் பொதிந்திருப்பதை உணர முடிகிறது !

// அவளுக்கு “வளையோசை..,” பாட்டு எனில்,எனக்கு “ஆயிரம் தாமரை மொட்டுக்களே...!” //

இந்த இடத்தில் கதை, கதையாக இல்லாமல் சற்றே பெரிய கவிதையாக இனிதே நிறைவடைந்திருக்கிறது. கதையோட்டத்தின் நிறைவை , இயல்பாக அதன் போக்கிலேயே அமைப்பது என்பது கதாசிரியனுக்கு எப்போதும் சவாலான ஒன்று ! இந்தியன் படம் வந்த சமயத்தில் இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில், " மகன் கமல் ஹாசனை ஏன் கொன்று விட்டீர்கள் ? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? " என்றொரு கேள்விக்கு இப்படி பதில் சொல்லியிருப்பார் !

" கதையை டிஸ்டர்ப் பண்ணாம அதன் போக்குலயே விட்டதுல எனக்கு இதுதான் சரியான க்ளைமாக்ஸா இருக்கும் னு பட்டது. இதை ரசிகர்களும் புரிஞ்சு ஏத்துப்பாங்கன்னு நம்பறேன் "

இங்கும் அதே போலத்தான் .....! கதையோட்டத்திற்கு எவ்வித தங்கு தடங்கலும் வராதபடிக்கு தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஒரு சுகமான தென்றலைத் தவழச் செய்ததில் வழக்கம் போலவே இந்தக் கதையிலும் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் !

தளத்தில் புதிய ஆக்கப் பூர்வமான முயற்சிகள் செய்வதில் தங்களுக்கு இணை தாங்களே .!

http://eluthu.com/kavithai/237637.html

நாள் : 28-Mar-15, 9:57 pm

மேலே