எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுபது வயதுக்கு மேல் ஆன ஏழை தம்பதிகள்... முதலில்...

எழுபது வயதுக்கு மேல் ஆன
ஏழை தம்பதிகள்... முதலில் ஒரு பன்
வாங்கினர்... அதை ஆளுக்கு பாதியாக
பிரித்தனர்...
அந்த மனைவி சிறிதாக
எடுத்துக்கொண்டு
முதியவர்க்கு கொடுத்தார்...
ஏதோ நினைத்த பெரியவர் மீண்டும்
இரண்டு பிஸ்கட்கள்
வாங்கி மனைவிக்கு கொடுக்க அதில்
பாதி மட்டும் அவர் எடுத்துக்கொண்டார் ...
மனைவி மீண்டும் கொஞ்சம்
கணவருக்கு கொடுத்துவிட்டு, இருந்த
ஒரு கப் டீயில் கொஞ்சம்
குடித்து மீதியை கணவருக்கு வலுக்கட்டாயமாக
கொடுக்கிறார்...
மறுபடி கணவர் திருப்பிக்கொஞ்சம்
பகிர்ந்து கொடுக்கிறார்...
தண்ணீரை கூட
பகிர்ந்தே குடித்து நகர்ந்தார்கள்...
தள்ளாத வயதிலும் தளராத
அன்னியோன்யம் கொண்ட
அவர்களை பார்த்து ஏனோ கண்கள்
பூத்துவிட்டது !!
வாழ்வின் அர்த்தத்தை ஏழ்மையில் கூட
விடாத விந்தை தம்பதிகள் !
-NTAMIL

நாள் : 2-Apr-15, 8:09 pm

மேலே