கோலம் அழகாய் இருக்கிறதே.. எங்கே இருந்து எடுத்தாய்? என...
கோலம்
அழகாய் இருக்கிறதே..
எங்கே இருந்து எடுத்தாய்?
என கேட்கிறாள் அம்மா..
எப்படி சொல்வேன் அவளிடம்?
காரசாரமாய் பேசும்போது
நீ காற்றில் வரைந்ததை தான்
நான் காகிதத்தில் வரைந்தேன் என்று..