எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்விடம் தேடிய ஒரு பறவைக்கு... இதயம் கொடுத்தது ஒரு...

வாழ்விடம் தேடிய ஒரு பறவைக்கு...
இதயம் கொடுத்தது ஒரு வானவில்...
வசந்தம் வீச, பூவாசம் சுவாசமாய் மலர...
ஆசையாய் சுற்றி திரிந்த பறவை...
இருப்பிடம் புளித்தவுடன், வானவில்லில் அமிலம் கலந்தது அதன் வார்த்தையால்...
வண்ணம் இழந்த வானவில் என்று பழியை சுமத்திவிட்டு பறந்து சென்றது...
கலை இழந்த வானவில்லோ கண்ணீர் குளத்தில்...
கரை படிய செய்த அந்த பறவையோ பருந்தின் கைகளில்...

பதிவு : kabir
நாள் : 6-Jul-15, 8:55 pm

மேலே