எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் நாட்டிற்கு பிறந்ததிலிருந்து வந்திராத பல தமிழ் குடும்பங்களை...

தமிழ் நாட்டிற்கு பிறந்ததிலிருந்து வந்திராத பல தமிழ் குடும்பங்களை தமிழ் நண்பர்களை நான் வெளிநாட்டில் பார்த்திருக்கிறேன் பழகி இருக்கிறேன்
ஆனால்
அவர்கள் யாரும் தமிழைப்பற்றி ஒரு சிறிய பிடிக்காத விஷயமும் இதுவரை என்னிடம் சொன்னதில்லை ஆனால் அவர்கள் என்னிடம் பேசும் போதும் பழகும் போதும் தமிழில் அழகாக சில பழமை வாய்ந்த வார்த்தையோடு இன்றும் பேசி வருகிறார்கள்..

தமிழில் பாடும் ஆங்கில பெண்ணை பார்த்திருக்கிறேன்...

தமிழில் பேசும் chinese மொழி மக்களை பார்த்திருக்கிறேன்..

தமிழில் பேசினால் புரிந்து கொள்ளும் பல மொழி மக்களை பார்த்திருக்கிறேன் ....

உன்னை தமிழை தலை கீழாக மாற்றச்சொல்லி யாரும்
வற்புறுத்தவில்லை ..

உன்னை ஊரெல்லாம் போய் பறைசாற்று என்று கேட்கவில்லை..

ஒன்று மட்டும் சொல்ல வேண்டும்...

உன் தமிழ் தாயை நீ பெருமையாக பேசவில்லை என்றால் ..

மற்றவர்களை நீ குறை சொல்ல மற்றவர்களை குத்தி காட்ட உனக்கு உரிமை இல்லை ..

யார் ஒருவன் மற்றவனை குறை சொல்கிறானோ ..

அவனிடம் அதைவிட அதிக குறை இருக்கும்..

ஒருவர் என்னிடம் உங்களுக்கு தமிழ் மிகவும் பிடித்ததா என்றார்
நான் அவரிடம் என்ன இது கேள்வி என்றேன்.

அதற்க்கு அவர் அப்படி என்றால் உடனே தமிழில் ஒரு கவிதை சொல்லுங்கள் என்றார்...

நான் ...

பெற்றெடுத்த என் தாயை..
அம்மா என்று அழைத்து ...
பெருமை கொள்ள செய்தவள் என் தமிழ் தாய்.... என்றேன்...

தமிழர்களுக்கும் ...
தமிழ் நண்பர்களுக்கும் என் இனிய மாலை வணக்கம்

பதிவு : சாமுவேல்
நாள் : 12-Feb-14, 3:51 pm

மேலே