மனம் எனும் காட்டில் பூத்து மறைந்திடும் எண்ணப் பூக்கள்...
மனம் எனும்
காட்டில் பூத்து
மறைந்திடும்
எண்ணப் பூக்கள்
தினம்
ஒரு வண்ணம் காட்டும்
தேடிடத்
தொலைந்து போகும் .
நிறங்களில்
நிலைத்து நிற்கும்
நேர்த்தியாய்
ஒன்றைக் கொய்து
வளம் தரும்
மையில் தோய்த்து
வார்த்தையாய்
வழி நடாத்தி
திறம்படத்
தாளில் தீட்ட
தேர்ந்திட்ட
படிமம் சேர்த்து
உளம் பல
கவரச் செய்ய
உருவக அணிகள் சூட்டி
நயம் பட வடித்த
பாட்டில்
நல் இசைச்
சந்தம்
சேர்த்து
வளம் கொடு குரல்
இசைக்க
வரம் ஒன்று
கிடைக்க வேண்டும்...