எழுத்து ... எழுத்து ... எழுத்தாய் ... (பகுதி...
எழுத்து... எழுத்து... எழுத்தாய்... (பகுதி - 2)
தள எழுத்து
விரிகடலாய் நிற்கும்கவிதை கதையாறுகள் கலக்கும்கலகலப்பு பல சமயம்கைகலப்பு சில சமயம்...
எண் திசை செய்திகள் யாவும்கொண்டு வந்தே குவிப்பார்எல்லோரும் அறியும் வண்ணம்எழுத்தினிலே பதித்துடுவார்
வாழ்த்துரைகள் வந்தும் சொல்வர்வசை பாட்டும் பாடி வைப்பார்கணினிக்குள் உலவும் சமூகம்களிப்புமுண்டு...கண்ணீருமுண்டு .....
கருத்துக்கள் ஆர்ப்பரிக்கும்நட்புறவும் கைகோர்க்கும்கவி மறந்து போனாலோஎழுதியதை கவிதையாக்கும்..
காற்றாட நினைக்கும் கவிக்குவந்துய்யும் தமிழ்ப் பூங்கா...கவித் தென்றல் சாமரம் வீசும்..நற்கவிகூட்டம் மதியும் மயங்கும்...
தலை எழுத்து
கடவுள் எழுதியதுஉரைத்திடுவார் மனிதருமேஇதனை இதுவரையில்படித்ததில்லை யாவருமே...
இதனை விதிஎன்பார்மதியினால் வெல்லலாம் என்பர்மதியினில் வெல்வதுவும்விதிவழி ஆவதறியார்...
ஜாதகத்தில் உள்ளதென்பார்கைரேகையிலும் தெரியுமென்பார்படித்தறியத் துடித்திடுவார்பணம் செலவழித்தும் அறியார்..
மூடு மந்திர எழுத்துமூடி வைத்த எழுத்து..வலிமை வாய்ந்த எழுத்துவார்த்தைகளில் அடங்கிடுமா???..