பசுமை விநாயகர் சதுர்த்தி எழுத்து தோழர்களுக்கு, வணக்கம்! எழுத்து...
பசுமை விநாயகர் சதுர்த்தி
எழுத்து தோழர்களுக்கு,
வணக்கம்!
எழுத்து இயற்கை முறையிலான மாசற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனைத்து தோழமைகளையும் அன்போடு அழைக்கிறது.
சுற்றுசுழல் பாதுகாப்பு, அதில் நல்லதொரு மாற்றம், இவ்விரண்டும் எங்கிருந்து
ஆரம்பிக்க வேண்டும் என்றால், நிச்சயமாய் அது நம் ஒவ்வொருவரின் வீடுகளில்
இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த, நாம் அனைவரும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட இயற்கைக்கு புறம்பான சிலைகளை தவிர்த்து, இயற்கையான களிமண், காகிதக் கூழ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே பயன்படுத்தி பண்டிகையை கொண்டாட உறுதிமொழி ஏற்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.
"எழுத்து தோழமைகள் அனைவருக்கும் எங்களது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்."
விநாயகர் சதுர்த்தி தமிழ் வாழ்த்து அனுப்ப இங்கே சொடுக்கவும்.
அனைத்து வாசகர்களும் தங்கள் பசுமை விநாயகர் சிலை புகைப்படங்களை நம் எண்ணத்தில் பகிரவும்.
நன்றி
இப்படிக்கு,.
எழுத்து குழுமம்