எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கார்த்திகை தீபம் ஏற்றும்போது பாட வேண்டிய பாடல் துன்பம்...

கார்த்திகை தீபம் ஏற்றும்போது பாட வேண்டிய பாடல்
துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை, 
அன்பர்தமை வாவென்று அழைக்கும் மலை. 
தன்பகத்தைக் காட்டும் மலை தன்னைக் 
கருத்தில் உறும் அன்பர் இடம் 
வாட்டுமலை அண்ணாமலை.’ 


பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும், தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே. இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

பதிவு : பாலாஜி
நாள் : 25-Nov-15, 2:26 pm

மேலே