கோ. நம்மாழ்வார்: கோ. நம்மாழ்வார்பிறப்புஏப்ரல் 6, 1938 இளங்காடு,திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர்...
கோ. நம்மாழ்வார்:கோ. நம்மாழ்வார்பிறப்புஏப்ரல் 6, 1938
இளங்காடு,திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர் மாவட்டம்இறப்புதிசம்பர் 30, 2013(அகவை 75)
அத்திவெட்டி,தஞ்சாவூர் மாவட்டம்தேசியம்இந்தியர்கல்விஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்அறியப்படுவதுஇயற்கை அறிவியலாளர்கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 டிசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில்[1] பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு[2] உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார்.30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) [3][4]மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்[5]பொருளடக்கம் [மறை] 1வரலாறு2எதிர்த்துப் போராடியவை3களப்பணிகள்4நடைப் பயணங்கள்5உருவாக்கிய அமைப்புகள்6படைப்புகள்7விருதுகள்8இவற்றையும் பார்க்க9மேற்கோள்கள்10உசாத்துணைகள்11வெளி இணைப்புகள்வரலாறு[தொகு]நம்மாழ்வார் , தஞ்சை மாவட்டத்தில் 1938 ல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா (Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.எதிர்த்துப் போராடியவை[தொகு]பூச்சி கொல்லிகள்மீத்தேன் வாயு திட்டம், இந்தியாமரபணு சோதனைகள்பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதிவெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதிவிவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்களப்பணிகள்[தொகு]சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு[6]இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டத்தில் நிறுவியுள்ளார்.மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். [7]"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிடுகிறார்.நடைப் பயணங்கள்[தொகு]1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.[8]உருவாக்கிய அமைப்புகள்[தொகு]1979ல் குடும்பம்1990 லிசா (1990 – LEISA Network)[9]1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்படைப்புகள்[தொகு]தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடுதாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடுநெல்லைக் காப்போம்வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடுஇனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடுநோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடுஎந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடுபூமித்தாயே, இயல்வாகை வெளியீடுநோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடுமரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடுகளை எடு கிழக்கு பதிப்பகம்விருதுகள்[தொகு]தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது[10]