எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெள்ளப் பெருக்கு குறைந்ததுஅகஸ்தியர் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள்...



வெள்ளப் பெருக்கு குறைந்ததுஅகஸ்தியர் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள்
வி.கே.புரம்.: வெள்ளம் குறைந்ததையடுத்து நெல்லை மாவட்டத்தில் எத்தனையோ அருவிகள் இருந்தாலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழக்கூடிய அருவி அகஸ்தியர் அருவி ஆகும்.

அதனாலே நெல்லை மாவட்டத்திற்கு எல்லையில்லா புகழை சேர்க்கும் இந்த அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது.மழையால் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக உள்ளது. தற்காலிக தீர்வாக சாலை பள்ளங்களை சரல்மண் போட்டு நிரப்பி உள்ளார்கள். 

அத்துடன் அருவிக்குச் செல்லும் வழியில் கடந்த ஆண்டு வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சிமிண்ட் ஸ்லாப்பை சரி செய்யததால் அருவிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக வயதானவர்களும் குழந்தைகளும் அருவிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை வனத்துறையினர் செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

நாள் : 3-Jan-16, 10:05 pm

மேலே