எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் புரிதல் வேண்டும் கவிதையிலே கரைந்திட வேண்டும் ஈதல்...

காதல் புரிதல் வேண்டும் 
கவிதையிலே கரைந்திட வேண்டும் 
ஈதல் அன்பென வேண்டும் 
இயன்றவரை கொடுத்திட வேண்டும் 
கண்ணில் நீவிழ வேண்டும் 
உன் பார்வையிலே தொலைந்திட வேண்டும் 
மண்ணில் மகிழ
வேண்டும் 
வான் வெளிப்போல்
முத்தங்கள் வேண்டும்நடக்கையில் நான் வர வேண்டும் 
நலம் யாதெனிலும் நாமென வேண்டும் 
நல்ல மெளனங்கள்
வேண்டும் 
அல்லால் உந்தன் குரலை போல் இனிமை வேண்டும்-சிவ சூர்யாஇது பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் மெட்டில் அமைக்கபட்டது

பதிவு : சிவ சூர்யா
நாள் : 6-Jan-16, 9:39 am

மேலே