எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பணம் படுத்தும் பாடு!~~~~~~~~~~~~~~தனந்தான் உள்ளே வந்ததுமேமனந்தான் வெளியே போனதுவேகணமும்...

பணம் படுத்தும் பாடு!~~~~~~~~~~~~~~தனந்தான் உள்ளே வந்ததுமேமனந்தான் வெளியே போனதுவேகணமும் நகைத்த முகமதிலே சினமும் கடிந்து வந்ததுவே
பணமும் வந்து சேர்ந்ததுமேகுணமும் மாறிப் போனதுவேவணக்கம் வைத்து சென்றதுமேபிணக்கும் ஆகி சோர்ந்ததுவே!
பார்க்கும் பார்வை திமிராலேயார்க்கும் அஞ்சா மனிதரானார்சேர்த்த பணத்தின்  செருக்காலேமூர்க்க குணமே தினம்வளர்த்தார்
சுடுஞ்சொல் நாவில் உரைத்திட்டேகொடுந்தேள் மாயம் செய்திடுவார்இனிமை வாழ்வை தொலைத்திட்டேதனிமை சிறையில் தவிக்கின்றார்
செருக்கு குணத்தை  விடுத்தாலேவிருப்பும் அவர்மேல் வந்திடுமேமதிப்பும் தானே உயர்ந்திடுமேகொதிப்பு அகமும் அடங்கிடுமே!
விஜயகுமார் வேல்முருகன்

நாள் : 11-Jan-16, 2:18 pm

மேலே