எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுயப்பாட்டு பொய்சொல்லுவேன் பொய்யே சொல்லுவேன் பொய்யிலே வீடுகட்டி போணியும்...

சுயப்பாட்டு

பொய்சொல்லுவேன் பொய்யே சொல்லுவேன்
பொய்யிலே வீடுகட்டி  போணியும் செய்வேன்  
 நீங்க வீடு கட்டினா எனக்கு கமிஷன் தரணுங்க
 கமிஷன் இல்லையின்னா காலையில சல்லி மணல் இருக்காதுங்க...

நானொரு அரசியல்வாதிங்க
நல்லா படிச்சவங்க
நியாயம்    தெரிஞ்சவங்க  
 நாலடி   தள்ளிப்   போவாங்க  ....

விதம்   விதமா   பேசி   வலை   விரிப்பதிலே   நான்  கில்லாடி
 வேலை  இல்லா  பட்டதாரி  வேலை  தேடி  வந்திடுவார்  எனக்கு பின்னாடி
 எப்போதும்  என்வீட்டில்  எக்கச்சக்க  கூட்டம்தான்
அப்பாவிகள்  இருக்கும்  வரை  என்காட்டில  மழைதான்  -அடை  மழைதான்

                                                                                         ....(நானொரு...)

எதிர் கட்சி   காரனோடு   எப்போதும்   சண்டைதான்  
 ஆளும்   கட்சி   ஆகிவிட்டா   அப்போதும்   சண்டைதான்  
 எதிர்கட்சி  ஆளும்  கட்சி  இரண்டும்  ஒண்ணுதான்
 எப்படியும்  வந்து  சேரும்  மாமூலு   பெட்டிபெட்டியா (தான் )

                                                                         ( நானொரு..)  

சுசீந்திரன்.

நாள் : 31-Jan-16, 9:44 pm

மேலே