எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடந்தால் நன்மையே நாஸ்டர்டாமஸ் என்பவர் குறித்து உங்களுக்கு தெரியும்...

நடந்தால் நன்மையே 


நாஸ்டர்டாமஸ் என்பவர் குறித்து உங்களுக்கு தெரியும் தானே, வருங்காலத்தில் நடக்கப்போவதை துல்லியமாக எழுதியவர் அவர். இளையராஜா சிம்பொனி அமைப்பார், நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிப்பார் போன்ற அனைத்து விஷயங்களையும் துல்லியமாக கணித்துள்ளார். அவரது நூலில் ஒன்பதாவது தொகுதியில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது 

Dieu grec ne peut pas sauver la dame de fer
Son Maître mourra aussi le lendemain
Son amie fille de trois tribus gouvernera pendant neuf ans
Terre de trois eaux deviendra super puissance

இதற்கு என்ன அர்த்தம் என்று கூகிள் டிராண்ஸ்லேட்டில் அடித்து பார்த்தால் கீழ்க்கண்டவாறு வருகிறது 

கிரேக்கம் கடவுள் இரும்பு பெண்மணி காப்பாற்ற முடியாது
அவரது மாஸ்டர் அடுத்த நாள் இறக்க
அவரது மூன்று பழங்குடியினர் பெண் நண்பர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்யும்
பூமியின் மூன்று நீர் சூப்பர் பவர் ஆகிவிடுவார்கள்

சம்பந்தமில்லாத வரிகள் போல் இருந்தாலும், இதில் ஆழ்ந்த பொருள் உள்ளது உறவுகளே 

முதல் வரியை பாருங்கள் 
Dieu grec ne peut pas sauver la dame de fer கிரேக்கம் கடவுள் இரும்பு பெண்மணி காப்பாற்ற முடியாது
அப்பலோ என்பது கிரேக்க கடவுள், நமது முன்னாள் முதல்வர் இரும்பு பெண்மனி என்று அழைக்கப்படுபவர். அப்பலோவில் சிகிச்சை பலன் இன்றி அவர் இறப்பார் என்பதையே இந்த வரி காட்டுகிறது 

அதற்கு அடுத்த வரி Son Maître mourra aussi le lendemain அவரது மாஸ்டர் அடுத்த நாள் இறக்க என்பது எந்த சந்தேகமும் இல்லாமல் சோ அவர்கள் மரணத்தையே காட்டுகிறது 

எனவே இந்த பாடல் தமிழகத்தின் தற்கால சூழலை தெளிவாக காட்டுகிறது என்பதை சந்தேகமில்லாமல் அறிந்து கொள்ளலாம் 

மூன்றாவது வரியை பாருங்கள் Son Ami de trois tribus gouvernera pendant neuf ans மூன்று பழங்குடியினர் அவரது நண்பர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்யும்
இங்கு  Ami de trois tribus என்பதை கூகிள் ”அவரது மூன்று பழங்குடியினர் பெண் நண்பர் ” என்று மொழி பெயர்த்துள்ளது. ஆனால் இதை முக்குலத்தை சேர்ந்த அவரது  பெண் நண்பர்”  என்றும் கூறலாம். அதாவது இரும்பு பெண்மனியான ஜெயலிதா அப்பலோவில் இறந்து, அவரது குருவான சோ அவர்களும் இறந்த பிறகு ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தை சசிகலா அவர்கள் ஆட்சி செய்வார் என்று நாஸ்டிரடாமஸ் தெளிவாக கூறியுள்ளார் 

Terre de trois eaux deviendra super puissance பூமியின் மூன்று நீர் சூப்பர் பவர் ஆகிவிடுவார்கள் என்ற நான்காவது வரி கூறுவது என்னவென்றால், அந்த ஒன்பது ஆண்டுகளில், மூன்று புறமும் நீரால் சூழப்பட்ட நமது பாரத புண்ணிய தேசம், மிகப்பெரிய பலமான வளமான சூப்பர் பவர் ஆகிவிடும் என்பதே

பதிவு : ஜெகன் ரா தி
நாள் : 12-Dec-16, 7:46 pm

மேலே