எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களுக்கு தெரியுமா.... பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்!...

உங்களுக்கு தெரியுமா....

பெர்முடா முக்கோணம் [Bermuda
Triangle] மர்மங்கள்! ஏன்?

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும்
ஆச்சர்யத்தின் கட்டமைப்பில்
சூழப்பட்டது தான், சிலவிசயங்கள்
நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால்
அறிய முடியாத மர்மங்கள் நம் கண்
முன்னே ஏராளம் ஏராளம்!,
தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக
அது என்றுமே அறியமுடியாத
விசயமாக கருத முடியாது,
இன்று நம்மால் வெகு எளிமையாக
விளக்கமுடியும் பல விசயங்கள்
ஒரு காலத்தில்
சாத்தியமேயில்லை என்று பலரால்
கைவிடப்பட்டது தான், அதில் இன்றும்
விவாத பொருளாக
இருப்பது பெர்முடா முக்கோணம்!
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே,
பனாமா கால்வாய்க்கு அருகில்
அமைந்துள்ளது பெர்முடா தீவு,
அதை ஒட்டி இருக்கும் மர்மமான
பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர்
தான் பெர்முடா முக்கோணம்.
அவை இன்று தான்
இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக
இப்படி தானா என ஆராய்ந்தால், அதன்
செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக
தான் இருக்கின்றது என தெரிகிறது.

விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல்
வழி போக்குவரத்து தான் தொலைதூர
பயணத்திற்கு உதவியது!,
இயற்கை சீற்றங்கள் மற்றும்
கடற்கொள்ளையர்களால்
அவை அழிக்கப்பட்டிருப்பின்
அச்செய்தி அக்காலத்தில்
யாருக்குமே தெரியாமல் அந்த
கப்பலுடனே புதைந்தது!, ஆனால்
பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த
போது……………

கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண
பகுதியில் வரும் போது மர்மமான
முறையில்
மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக
இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின்
கடலுக்கடியில் இருக்கும்
எரிமலையின் வெடிப்பின் காரணமாக
ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என
அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில்
ஏற்படும் அலைகள்
சுனாமியை போன்று ராட்சசதனமாக
இருக்கும், கவனிக்க
இது கரை தொடவேண்டும் என்ற
அவசியமில்லை,
நடுகடலிலேயே அமைதியாகி விடலாம்,
அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)”
என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய
அலைக்கு பின் வரும் பெரிய
அலை அதனுடன்
சேர்ந்து ராட்சசஅலையாக
உருவாகி பெரிய கப்பலை கூட
கவிழ்ந்துவிடும்!,…
கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த
செய்தியும்
வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!

சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள்
காணாமல் போக, எரிமலை, பூகம்பம்,
ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல
காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான்
மார்க்கமாக செல்லும் விமானங்கள்
எப்படி காணாமல் போகின்றன என்ற
கேள்விக்கு விடை தேடும்
முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.

1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த
F19 வகை போர் விமானங்கள்
ஐந்து பெர்முடா முக்கோணத்தின்
மீது பறந்தன, ரோந்து பணிக்காக
கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர்
வரை செல்லவது அவர்களது இலக்காக
இருந்தது, கிளம்பிய 2 மணி நேர
அளவில், ஐந்து விமானங்களும் தள
கட்டுபாட்டில் இருந்து மறைந்தது,
மொத்தமாக ஐந்து விமானங்களும்
காணாமல் போயின!, நேரடியாக
தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும்
விமானிகள் தொடர்பு கொள்ள
முயற்சித்திருப்பது தெரியவந்தது,
அருகில் சென்று கொண்டிருந்த பெரிய
கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ்
செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல
வேண்டிய திசையில்
இருந்து மாறி ஐந்து விமானங்களும்
வேறு திசையில்
பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள்
பெர்முடா முக்கோணத்தில்
விழவில்லை, அருகில் இருக்கும்
தீவுகளில்
எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில்
விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள்
சொன்னாலும் இதுவரை விமானத்தின்
ஒரு பாகம் கூட
கிடைக்கவில்லை என்பது இன்னும்
ஆச்சர்யம்!

சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன்
என்ற விமானி சொன்ன தகவல்கள்
பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும்
அதிகமாக்கியது,…. புரூஸ்
மியாமியிலுருந்து பஹாமா வழியாக
போர்டோரீகா சென்று கொண்டு இருந்தார்,
அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள்
சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான
அறிகுறிபோல் அது தோன்றியது,
திசைகாட்டும் கருவி விடாமல்
சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக
அவரால் சரியான திசையை கண்டறிய
முடியாது, இருப்பினும் அவரது 15
வருட விமானம் ஓட்டும் அனுபவம்
அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க
வைத்தது, தொலைவில்
மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற
வழியை கண்டார், அதில் தெரிந்த
ஒளி தப்பிக்க
ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த
மறுநொடி அவரது விமானத்துக்கு பின்
கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது,
அவருக்கு முன் கரிய நிற கோடுகள்
வளையமாக நிறைய தோன்றின!
கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த
குகையை கடக்க அவர் பயணித்தாக
கூறிகிறார், ஆனால் அதற்கு அவர்
எடுத்து கொண்ட நேரம் வெறும் 20
நொடிகள் தான், அவரது விமானம்
அதை கடக்க பொதுவாக
எடுத்துக்கொள்ளும் நேரம்
குறைந்தது மூன்று நிமிடங்கள்,
அது மட்டுமல்ல
அங்கிருந்து வெளியேறிய பின்னரும்
அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது,
மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள்
மற்றும் சாம்பல் வண்ணத்தில்
காணப்பட்டது, பஹாமா அடைய அவர்
கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால்
அதற்கான நேரம் வெறும்
மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ
மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில்
பயணித்திருக்கிறார் ஆனால்
அவரது விமானத்தின் அதிகபட்ச
வேகமே 300 கீலோமீட்டர்கள் தான்
மணிக்கு!

எவ்வாறு இது சாத்தியமானது?
கப்பல்கள் காணாமல் போக ராட்சச
அலைகள் மற்றும் பனாமா கால்வாயின்
நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என
கண்டறிந்த போதும், விமானம்
காணாமல் போக என்ன காரணம்
என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள்
குழப்பத்தில் இருந்தார்கள்,
திசைகாட்டி குழம்பியதின் காரணமாக
அது சூரியனின் மின்காந்த அலைகளாக
இருக்கலாம் என கருதினாலும்
விமானம் காலத்தை குறுக்காக
வென்றது எப்படி? அதில்
தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும்
சூத்திரம், காலத்தை வெல்ல அதில்
எந்தளவு சாத்தியம் உண்டு என
தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின்
உதவியால் தூரத்தில் இருக்கும்
கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என
சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
சொல்கிறார்!

வார்ம்ஹோல் என்றால் என்ன
என்று எளிமையாக சொல்ல பூமியில்
இருக்கும் ஒரு உதாரணத்துடன்
ஆரம்பிக்கிறேன்!,
புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள்
வானில் பறக்க
இறக்கைகளை பயன்படுத்துகின்றன,
ஆனால் சிலநேரம்
அவை இறக்கைகளை அசைக்காமல்
வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும்
அது காற்றின்
விசையை பயன்படுத்துகிறது என
விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்,
அதே பாணியை பயன்படுத்தி தான்
கிளைடர்கள் பறக்கின்றன,
அதாவது இயற்கையில் இருக்கும்
சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன்
செலவழிக்காமல் பலனடைவது,
அதே போல் வார்ம்ஹோலையும்
பயன்ப்படுத்தமுடியும்
என்பது விஞ்ஞானிகளின் கருத்து!

இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல
விஞ்ஞானிகளின் கருத்து,
ஒரு வட்டத்தின் விளிம்பில்
சுற்றி வருவது சாதாரணமாக நாம்
நேராக பயணம் செய்வது, அதன்
குறுக்கு வெட்டில் பயணம்
செய்வது காலத்தையும்,
தூரத்தையும் வெல்லும் தந்திரம்!,
பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர்,
டார்க் எனர்ஜியை பொருளின்
மீது செலுத்தும் போது பொருள்
பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது,
ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட
வேகமாக செல்ல எதுவாலும்
முடியாது, ஆனால் டார்க்
எனர்ஜி அது சாத்தியம் என்கிறது,
காரணம் பின்னிருந்து தள்ளும்
அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக
உறிஞ்சும் வேலையையும்
அது செய்கிறது, ஒரே நேரத்தில்
இருவிசையின் பயன்பாட்டுடன்,
பொருள் ஒளியின்
வேகத்தை மிஞ்சமுடியும்
என்கிறது விஞ்ஞானம்! ஆனால்
ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும்
ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும்
முடிவுக்கு வரமுடியவில்லை,
ஒருவேளை ஒன்றாக இருந்தால்
உள்ளே செல்லும் நாம் வெளியேற
முடியாது,
சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!
விஞ்ஞானம்
இறுதி வரை ஒரு செயலின்
சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான்
இருக்கிறது, நமக்கு அதில்
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும்,
அதை கேள்விகுள்ளாக்குவதும்
அடுத்த கட்ட விஞ்ஞான
வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

நன்றி
டிஸ்கவரி சேனல் தமிழ்.

நாள் : 4-Apr-14, 8:56 am

மேலே