எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலர்ச்சி…!! 1. இலைகள் மரத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் தனித்து...

                    மலர்ச்சி…!!   


 1. இலைகள் 
 மரத்தில் ஒற்றுமையாக 
 இருந்தாலும் 
 தனித்து
சண்டைப் 
 போடுவதில்லை. 

 2. பெரியது கடல் 
 எப்போதும் 
 கரையை 
மோதி பார்க்கிறது 
 அலைகள். 

 3. வெளிச்சத்தைத் 
 திரைப் போட்டு 
மறைக்கிறார்கள். 
 அம்பலமாகின்றன 
 இரகசியங்கள். 

 4. நீளக் கோவணமாய் 
இருக்கிறது 
 மால்களில் 
GST வரியுடன் 
 சேர்த்து கொடுக்கும் 
 கம்ப்யூட்டர் பில். 

 5. வடை 
சுடப் போனான் 
 கை 
 சுட்டுக்கிட்டு 
 நிக்கிறான். 

 6. பச்சை பச்சையாய் 
 திட்டினான் 
 கலகப் பேச்சு 
 அடுத்தவனும் 
 அதே கலரில்
திட்டினான். 

 7. இரவில் பூக்கள் 
 மலர்ந்திருந்தாலும் 
 விழித்திருக்கவே 
 செய்கின்றன 
 யாருக்காகவே?
ந.க. துறைவன்.         

பதிவு : துறைவன்
நாள் : 20-Aug-17, 10:03 am

மேலே