எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவலையான என் வாழ்வில் மகிழ்ச்சியை தந்தவள் நீ... வாடிய...

கவலையான என் வாழ்வில் மகிழ்ச்சியை தந்தவள் நீ...
வாடிய என் முகத்தில் புன்னகையை வர வைத்தவள் நீ...
இருண்ட உலகில் வெளிச்சத்தை தந்தவள் நீ...
அன்புக்காக ஏங்கிய எனக்கு அன்பை பொழிந்தவள் நீ...
என் வாழ்க்கையை அழகாக்க வந்த தேவதை நீ...
இத்தனை வருட காதிருப்பில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ...
உனக்கு தந்தையின் அன்பை நான் தருவேன் ...
எனக்கு அன்னையின் அன்பை நீ தருவாய் என்று எதிர்பாக்கிறேன்...
சண்டைகள் போட வேண்டும் 
தோளில் சாய்ந்து நான் இருக்க நீ சமாதானம் செய்ய வேண்டும்...
உன் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் அதில் நான் மகிழ வேண்டும்...
என் கண்ணீரை துடைக்க உன் கரங்களை தேடுதே...
நீயோ என் அருகில் இல்லையே...
மடியில் உறங்க ஆசையாய் இருக்கிறது 
என் அருகில் நீ இல்லையே...
உன் கரம் பிடித்து நடக்க ஆசை 
என் அருகில் நீ இல்லையே...
பழகிய நாட்கள் குறைவு உன்னை பற்றிய கனவுகள் ஆயிரம்...
உன்னுடன் வாழ ஆசை கனவில் மட்டும் இல்லை நிஜத்திலும் தான்...
எதுவும் கடந்து போகும் என் எதிர்பார்ப்பும்தான்....
என் அன்பை சொல்லிவிட ஆசை 
எங்கு நம் நட்பு பிரிந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம்...
உன்னை சிரிக்க வைத்து நான் மகிழ வேண்டும் ...
உன் கஷ்டத்தை புரிந்து கொண்டு ஆறுதலாய் நான் இருக்க வேண்டும் 
என் அன்பை புரிய வைக்க நேரம் இருந்தும் சொல்லி விட மனம் மறுக்கிறது ...
நீ என் மீது செலுத்தும் அன்பு காதல் என்று நினைத்து என் அன்பை சொல்லிவிட்டு பிரிந்து செல்ல நான் விரும்ப வில்லை அன்பே நேரமும் காலமும் வரும் பொழுது என் அன்பை நான் வெளிப்படுத்துவேன் அது வரை காத்திருப்பேன் உனக்காக அன்பே 
ஒரு முறை ஏமாற்றம் அந்த வலியில் இருந்து வர வருடங்கள் ஆயிற்று ...
இந்த முறை ஏமாற மாட்டேன் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் உன் பதிலுக்காகவும் உனக்காகவும்........

பதிவு : antony
நாள் : 19-May-18, 7:52 am

மேலே